குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது…
Category: ஆக்கங்கள்
என் தனிமை யானே
அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் கழுவிய முகத்தில் பிரிந்திறங்கும் மயிர்ப்பீலிகளென விரிந்து பரந்தது. காற்றின்…
சுகந்தமும் வியர்வையும்
எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும். வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து அடைக்கும் மின்னல்கள் துலங்கும். காற்று அளைந்து எடுத்து வரும்…
செயற்களம் புகுவோருக்கு: 03
அரசியல் வெளியை ஆக்குதல் ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை முதலீடாக்கிய அரசின் தொடர்ந்த கண்காணிப்பையே. எங்கு கூட்டமென்றாலும் போராட்டம்…
மணி மருள் பூ
காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது! கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,எம் இல் அயலது, ஏழில் உம்பர்மயிலடி இலைய மா குரல்…
சூடுதல்
முன்னொருநாள் ஒரு தெருக்கூத்திற்காக மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். எனது மாணவியொருத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த உடைந்த கற்தூணில் அமர்ந்திருந்தாள். என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்லை சேர், எனக்கு என்ர பேர் நல்லமில்லை எண்டு கவலையா இருக்கு. எல்லாருக்கும் எவ்வளவு…
துளித்தீகள்
ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ வைக்க முடியாதது. காட்சியின்பமாகவே ஆகும் வரிகள் அவை. சேணோன்…
வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்
இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு…
வேலன் வெறியாட்டு
அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் உள்ள ஒரு இளம் பெண் சாமியார். பலவகையான வித்தைகளைக்…
சிறு கோட்டு
பொன்னை இன்னொரு பொன் தாழிக்குள் வைத்துப் பாதுகாப்பதைப் போல் ஒரு கவிதையை இன்னொரு கவிதைக்குள் வைத்து விடலாம். அது பழந்தங்கத்தின் நுண்மையான இழைகளைப் புது வார்ப்பினுள் சேகரிப்பதென ஆகும். சங்கக் கவிதைகளை அப்படி எடுத்துச் சொல்லும் வாசிப்பு முறையையே நான் கைக்கொள்ள விரும்புகிறேன். காதலின்…