தினசரி வாழ்வின் கவித்துவம்
தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. சபரி நிறையப் பேச வேண்டும் என எண்ணுகிறேன். கவிதைகளை அதன் ஆழங்களிலிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.