அழகற்ற கேள்வி
உறுமிச் செல்லும் அம்மாவின் மோட்டார் சைக்கிளின் பின்னிருந்து அவளது செல்லத் தொப்பையில் கைகளை வைத்து மேளமடித்தபடி செல்லும் சிறுமியின் விரல்களில் வழிவது அழகு வீதியின் இரண்டு கரைகளிலும் நுரைத்திருக்கும் சரக்கொன்றைகளின் கீழ் காத்திருக்கும் பெண்ணின் ... Read More
அல் ஆடும் ஊசல்
இருளுக்கும் இருளுக்கும் இடையில் ஓர் ஊசலில் அமர்ந்திருக்கிறது காகம் ஒரு வெளவாலைப் போல. ஒளிக்கும் ஒளிக்கும் இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மிதக்க விரும்புவேன். இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் ... Read More
தும்பி: 82
"சிறந்த கதைகள் உண்மையைத் தேடும் ஒரு உந்துதலிலிருந்து உருவாகின்றன...அவை நம்மை நத்தையூர்ந்து செல்வது போல மெல்ல மெல்ல செயலில் உந்தும், பணிவாக்கும், நாம் அறியாத மனிதர்களுடன் மனதளவில் கனிவிரக்கம் கொள்ளச் செய்யும். அந்த மனிதர்களைப் ... Read More
துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்
கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ... Read More
அன்னையர் எழுதல்
ஆசிரியை ஒருவர் வயிற்றில் கருச்சுமந்திருக்கும் பொழுது கணவனால் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பற்றி எழுதிய அன்னையர் அறமிழத்தல் எனும் குறிப்பிற்கு வழமையான எதிர்வினைகளையோ சமூகவலைத்தள எரிவுகளையோ பொருமும் சராசரிகள் மெளனமாக இருக்கிறார்கள். அவர்களால் ... Read More
அன்னையர் அறமிழத்தல்
அறம் என்றால் என்ன என்பதற்கு ஜெயமோகன் தன் உரையொன்றில் கூறிய கதையொன்று அறத்தின் அடிப்படையைத் தீர்க்கமாக முன்வைப்பது. தோமஸ் அல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்த பின்னர் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும் அதன் சக்தியை மக்களுக்குக் ... Read More
கொடிறோஸ் – குறிப்பு 2
யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் "வாழ்க்கைக்கு திரும்புதல்" என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மயான காண்டம்" என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. 'புதிய சொல்' என்ற கலை இலக்கிய எழுத்துச் ... Read More
எழுநா – புத்தக மன்றம்
எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது ... Read More
‘கனவே திறந்து விடு, உன் கதவை’
(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் ... Read More
கொடிறோஸ் – குறிப்பு
ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் ... Read More