ஒரு பட்டிப் பூச்செடி
நாங்கள் காதலிக்கத் தொடங்கி அது தான் பிரிந்தாவின் முதல் பிறந்த நாள். நானும் அனோஜன் பாலகிருஷ்ணனும் எங்கேயோ இலக்கிய சம்பந்தமாகச் சுற்றி விட்டு அவனுடைய சுப்பர் கப்பில் பலாலி வீதியால் திரும்பிக் கொண்டிருந்தோம். திடீரென்று கெற்றப்போல் சந்தியடியில் வைத்து “இண்டைக்கு உன்ர கேர்ள் பிரண்டின் பேர்த் டே” எனச் சொன்னான். திடுக்கிட்டு விழித்தது மூளை. எனக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் இருக்கும் அசமந்தம் வேறு எதிலும் இருப்பதில்லை. பிறந்த …
