முதலில் உதித்த செஞ்சூரியன்

  இம்மாதம் 20 ஆம் திகதி ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கே. டானியலின் நூற்றாண்டு நினைவும் அவரது நாவல்களினது செம்பதிப்புகளின் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்மர் மண்டபத்தில் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நிகழ இருக்கின்றது. வாசகர்களும் எழுத்தாளர்களும் நம் முன்னோடிகளை நினைவு கொள்ளவும் மீள வாசிக்கவும் உரையாடவும் விவாதிக்கவும் இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவசியமானவை. ஆர்வமுள்ளோர் வருக. கே. டானியல் படைப்புகள்

மீமாம்ஸகர்கள்

ஜெயமோகன் தளத்தில் பாலையில் முளைத்தல் என வெளியான குறிப்பில் இலங்கைத் தீவின் மேல் எங்கள் முகங்கள் இருப்பது போன்ற படத்தைப் போட்டிருந்தார். தமிழ் கூறும் நல்லுலகை ஆண்டு வருபவர், மும்முடிச் சோழமண்டலத்தின் பேரரசர் ஜெயமோகன் தான் என்பது ஒரு ஈழத்து நாட்டுப்புறக் கதை. ஆகவே அவர் எங்கள் முகங்களை போட்டதை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்த்தேன். தர்மு பிரசாத்தும் தன் பங்கிற்கு எளிய மீமாஸ்ஸகர்களுடன் இணைகிறார்.   தோழர்களே, இலக்கிய …

ஆசிரியரின் சொற்கள்

ஆசிரியர் ஜெயமோகன் ஈழத்தில் புதிய அலைக்கான சாத்தியமும் விசையும் என்னிடமும் யதார்த்தனிடமும் இருப்பதாக ஒரு அவதானிப்பை சொல்லியிருக்கிறார். “பாலையில் முளைத்தல்“. ஒரு நற்சொல் என்பது எப்பொழுதும் பொறுப்பும் கூட. அவரிடமிருப்பது ஓர் எதிர்பார்ப்பு. அது நிகழக் கூடும், நிகழாமல் போகவும் கூடும். இலக்கிய விவாதங்களில் அடிப்படைகளையும் வாசிப்பதற்கான வழிகளையும் ஓரளவு விரிவாக எழுதிய பின்னர் இந்த எதிர்வினைகளின் காலத்தைக் கடந்து சென்று விடுவேன். எங்கள் சூழலில் வாசிப்பு அறவே இல்லையெனச் …

சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் – தர்மு பிரசாத்

“..மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகள் படிக்கும் போது நடந்த விவாதம் நினைவில் வருகிறது. ஒரு கதைக்குப் பல பக்கங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிலிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் …

வாற்பேத்தை வாழ்க்கை – யதார்த்தன்

“சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து  யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு  முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. …

கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும்

இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும். மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் …

இருத்தலைக் காட்டுவது – எதிர்வினை

“ஒவ்வொரு தனிமனிதனும் தனி ‘உலகம்’. இந்த உலகங்களையெல்லாம் ஒருகுடையின்கீழ் கொண்டுவருவதும், சிந்தனையை ஒழுங்கமைக்க முயற்சிப்பதும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாற்றமுற வேண்டிய சிந்தனை. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாக இவற்றை கொண்டாட வேண்டிய தேவையும் இல்லை.இகழவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கையின் தமிழ் அரசர் வரலாற்றைக் கூட பாடப்புத்தகங்களில் பதிக்க முடியாத ஏதிலிகள், காத்திரமான படைப்புகளை அனுப்பியாவது இருத்தலை காட்ட வேண்டாமா? அதேநேரம் எதிர்காலம், காத்திரமான இலக்கியம் …

கம்பாட்டமும் தூவக்காளியும்

ஜெயமோகனின் சிறுகதையான தூவக்காளியை இடைக்கிடை திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஒரு தூவக்காளி ஆட்டக்காரரான அப்பா குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தன் மகன் ஆட்டத்துக்கு செல்ல தயங்கி, விருப்பமின்றி இருக்கும் பொழுது அவனுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அதன் மூலமந்திரத்தையும் கொடுக்கிறார். அவன் நம்பிக்கையின்றி ஒரு வீட்டிற்கு ஆட்டத்திற்குச் செல்கிறான். அங்குள்ள பெண்ணின் முன் புல்பிள்ளயை வைத்து சடங்குகளைச் செய்கிறான். அறியாத ஒரு கணத்தில் அவனுள் எழும் தூவக்காளியை கண்டு …

அரசின் விருதுகள் – எதிர்வினை

நேற்று நான் எழுதிய அரசின் விருதுகள் குறிப்புத் தொடர்பில் காலையிலேயே ஓரிரு வசைகளுடன் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. முழுவியலம் அமங்கலமாக இருப்பது ஒருவகையில் நேற்றின் தொடர்ச்சி தான். ஆற்றப்படும் அனைத்து செயல்களுக்கும் வினைகளுக்கும் எப்படியோ எப்பொழுதோ எதிர்விசைகள், பழிநிகர்கள் நிகழ்வது இயற்கையே. ஆனால் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் நான் அந்தக் குறிப்பை சோ. பத்மநாதனை அவமதிப்பதற்காக எழுதியதாகக் கருதியே கடுமையாக ஏசியிருக்கிறார். அவருக்கு யாரோ வட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அரச இலக்கிய …