இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில…
பெருங்காவியம் – சிறுகதை
“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்து கொண்டிருக்கிற ஒண்டை இங்க இருந்து போய்த் தொட முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்ய வேணும்?” என்றேன்….
சலாங்கையா – சிறுகதை
மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின்…
புஞ்சி மல்லி – குறிப்பு
ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும்…
புஞ்சி மல்லி – சிறுகதை
“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின. “கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக்…
அலைந்து உழலும் ஒரு மனதின் கதைகள்
கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க…
ஸலாம் அலைக் – ஒரு விருது
பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறந்த ஆசிய நாவலுக்கான Prix Émile Guimet – 2026 விருது ஷோபா சக்தியின் நாவலான ஸலாம் அலைக்கின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்திருக்கிறது. மூத்தோனுக்கு வாழ்த்துகள். “நிகழ்வில், விருதளிப்புக் குழுவைச் சேர்ந்த Laure Adler “பிரெஞ்சு நாவல்களின் எதிர்காலம் ஸலாம் அலைக்கில் உள்ளது”…
பொழிவு
நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வெறுமையாக கைகளை நீட்டிக் கொண்டு வெய்யில் பொழிவதை ஏந்திக் கொண்டு தனிமையை வேடிக்கை பார்த்துக் கொண்டு உன்னை நீயே நொந்து கொண்டு உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக் கொண்டு மஞ்சள் பூக்கள் பெய்வதைப் பார்த்தபடி உனக்கு யாரும்…
அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்
நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு…
புத்தகங்கள் மீதான தடை
இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து…