மொழிநடை, செல்வாக்கு – ஜெயமோகன்

‘பித்தம் தெளிய வைத்தல்’ எனும் என் எதிர்வினையில் மொழிநடையில் மூத்த தலைமுறையினரின் செல்வாக்கு பற்றிய என் பார்வைகளை தொகுத்து எழுதியிருந்தேன்.  மொழிநடை மீதான செல்வாக்கு குறித்து ஜெயமோகன் தன் தளத்தில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகளின் இணைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன். “….இது மிகச் சிக்கலான, மிக மிக நுணுக்கமான ஒரு செயல்பாடு. பல்லாயிரம் கிலோ எடையைத் தூக்குவது போலவோ, மெல்லிய பனித்துளி ஒன்றை சுட்டுவிரல் நகத்தின் மேல் எடுத்துக்கொண்டு வருவது போலவோ, …

யாத்திரை : சிறுகதை

‘யாத்திரை’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா செப்டம்பர் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா செப்டம்பர்

ஒரு தெய்வத்தை எழுப்புதல் : முன்னுரை

நான் ஒரு கவிஞன் என்ற ஆணவம் அளிக்கும் நிமிர்விலும் செளகரியத்திலும் நெடுங்காலம் ஆழ்ந்திருந்தேன். என் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளிவந்த பின்னர் அது மெல்ல மெல்ல மாறியது. தொகுத்து அளிக்கப்படும் பொழுது சுருங்கிக் கட்டியாகி சிறிய கூழாங்கல் போலாகியது. கவிதையின் உச்ச கணங்கள் அளிக்கும் நிறைவுணர்வு சட்டென்று அகன்று விடுவது. மிச்ச நேரமென்பது மூளையின் நெசவுத்தறிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாய கொந்தளிப்புடன் இருப்பது என்பதாகி விட்டது. கவிதையைப் …

தத்வமசி : முற்பதிவு

“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன்.  அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’. கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் …

மாலு பாண் விற்பவர்

||பிழைப்புவாதத்திற்கும் விருது ரியாஸ் குரானா படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில், ஆளும் வர்க்கத்தின் ஏவலாட்களாகச் செயல்படும் அறிவுத்துறைத் துரோகத்தின் ஆகச்சிறந்த அடையாளம் கவிஞர் கருணாகரன். இது வெறும் பிழைப்புவாதத்தைக் கடந்த ஒரு கருத்தியல் வக்கிரம். தனது துரோகங்களையும் அரசியல் சமரசங்களையும் தந்திரமாக மூடிமறைக்க அவர் அரங்கேற்றும் நாடகங்கள் எந்தவொரு முதலாளித்துவத் தந்திரசாலியையும் மிஞ்சக் …

சிலந்தி வலையில் ஒரு பனித்துளி

  “எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன்   தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வருடத்திற்கான இயல்விருது ஓவியர் ட்ரோஸ்கி மருதுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணாகரனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2026 இற்கான கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய …

மொழியின் திகைப்பு

“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா? த‌மி‌ழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன். * என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், …

பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

சலாங்கையா – கடிதம்

அன்புடையீர், வணக்கம் “தளம்” இதழை அதன் ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். “உங்கள் அண்ணனைப் பற்றி ஒரு சிறுகதை,வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்” என்று போன் செய்திருந்தார். நான் தெளிவத்தையின் தம்பி. தமிழ்நாட்டில் இருக்கின்றேன். அண்ணனின் சிறுகதைகளை நிறைய வாசித்திருப்பீர்கள். முதற்கண் அதற்கு நன்றி. அண்ணனுடைய அனைத்து சிறுகதைகளும் 59 ம் ஒரே நூலாக தொகுத்து வெளிவந்திருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள். வெளிநாட்டிலா. சத்துரு கொன்றான் மட்டகளப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். …

மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …