Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

13: விருபம் எழல்

Posted on May 28, 2024May 28, 2024 by Kiri santh

பதும்மையும் இளம் பாணனும் காட்டின் ஒற்றை வழிக்குள் நுழைந்த பொழுது குருகெனக் காலசைத்து அவர்களை நோக்கி நாணிய பின் மனையின் பின் தூணில் சாய்ந்து நின்றாள் விருபாசிகை. மனையினுள்ளே வேறுகாடாரும் அங்கினியும் இன்னும் சில பெண்களும் அகிற்புகைக்குள் தோன்றி மறைந்து மீண்டு தோன்றினர். அங்கினி வேறுகாடாரின் வெண்முடிகள் சடைத்த மரக் கரங்களைப் பற்றியபடி அவரையே விழியுற்றிருந்தாள்.

விருபாசிகையின் வதனம் வெண்மதியென வளைவு அமைந்தது. முகத்தில் சிறுமலர் நுனிகளெனப் பருக்கள் முகைத்திருந்தன. நாசி தெய்வங்களின் பிடியளைவில் உதித்த அம்சம். நுதல் தேவியின் திருவாசிகை வளை. தோல் சேற்றில் அளைந்த வெண்ணல்லியென வண்ணம் குழைந்தது. கூந்தல் முதுகுவரை பரந்து விரியலிலேயே நிலைத்திருக்கும். காற்றில் எங்கேனும் சிறு கற்றை முடி எழுந்து துழாவும் பொழுது கந்தர்வர்கள் அவளின் கால்விரல்களில் முகம் புதைத்து நீ வேண்டும் தேவி என அழுவர். அப்படியவர்கள் அழும் பொழுது மட்டும் கூசும் கால்விரல்களை மடித்து நெட்டி முறித்துக் கொள்வாள். தோள்கள் மாங்கனியின் சதையென ஒளிவிடுபவை. மார்புகள் சிறுகுன்றின் எழில் கொண்டு அணைந்து நிற்கும். காம்புகள் அரும்பும் மென்விழியென மூடியிருக்கும். உதடுகள் சிறு பாகுத்துண்டிழை எனச் சுவை கனிந்திருக்கும். அவள் இடையும் தொடையும் விழிகள் பார்த்துக் கொண்டிருப்பதற்கென்றே மண்ணிறங்கியவை. கால்விரல்கள் என்றும் குலையாத நிறையழகை அணிந்தவை. பிருஷ்டங்களின் தண்மை மறைந்திருந்து அருளும் யட்சிகளின் கன்னங்கள்.

விருபாசிகையின் விழிகளில் நித்தியமாய் எரிவது அஞ்சலற்ற நித்திய மோகம். அவள் விழிகளை நோக்குபவர் முதற் தொடுகையில் அறிவது அதன் முடிவின்மையை. வகையின்மையை. அழிவின்மையை. அச்சமின்மையை. கனிவின்மையை.

அவ்விழிகள் இமைத்து மறுபடியும் திறந்து கொள்ளும் போது நோக்குபவர் அறிவது அதன் முழுநிறைவை. தனிக்கனலை. பொசிஇனிவை. பெருமயக்கை. பிறிதொன்றில்லாத முதல் தெய்வத்தை.

அவள் குரலில் அளையும் தூபத்தின் இன்மணம் அருகலைந்தவரின் நெஞ்சில் தோற்றுவது மயக்கு குரலானால் இப்படி மயங்குமென்பதை. ஒலிக்குமென்பதை. உறையுமென்பதை. நீங்காதென்பதை. மழுக்குமென்பதை.

அவள் ஆடைகொண்ட முலைகளைக் காண்பவர் அறிவது விழைவை மறைப்பது எப்படியென்பதை. பழங்கள் சுவைவது எங்கெனமென்பதை. மென்மை துயிலில் அசையும் என்பதை. அகற்சுடரில் உந்தும் தழல் எதுவென்பதை. அவற்றைத் தொட்ட விழிகள் இனி அம்பறாத் தூணிக்குத் திரும்பாதென்பதை.

அவள் கொங்கைகளை மெய்யில் காண்பவர் அறிவது துடியென்பது எப்போதும் இரண்டென்பதை. காமம் எப்போதும் துவிதமென்பதை. இருவிழிகள் எப்போதும் அவைக்குத்தானென்பதை. கரங்கள் எப்போதும் போதாதென்பதை. நாவிற்கு எப்போதும் பலிமேடையென்பதை.

அவள் இடையைக் காண்பவர் அறிவது எதனால் மத்து நஞ்சைக் கிளைந்தது என்பதை. எதனால் வானம் வெளியால் தாங்கப்படுகிறது என்பதை. எதனால் வெண்ணையைக் கண்ணன் திருடினான் என்பதை. எதானால் மூங்கில்கள் ஏழுதுளைகளை இட்டுக் கொண்டு காற்றை இனித்தாலும் ஒரு துளையே இதழில் பதிகிறது என்பதை. இடைக்கு எதனால் இணையே இல்லாத தாபம் நெளிகிறது என்பதை.

அவள் அல்குல் மயிரின் சிறுகொடி இடையில் ஏறுவதைக் காண்பவர் அறிவது ஆண் எதனால் பெண்ணை நோக்குகிறான் என்பதை. யட்சிகள் எதனால் காமமுறுகிறார்கள் என்பதை. முயங்கல் எக்கொடியில் பற்றியேறும் என்பதை. சிறியவைக்குப் புணர்வில் என்ன களி என்பதை. எதை மறைக்க இத்தனை பிறவழகுகள் தோன்றின என்பதை.

அவள் ஆடைக்குள் மலர்ந்த புன்புல் வரையை அகக்கண்ணால் காண்பவர் அறிவது கற்பனைக்கு ஏன் இத்தனை பித்திருக்கிறதென்பதை. அறியமுடியாமைக்குள் ஏன் இத்தனை பொருளிருக்கிறதென்பதை. இடையாடைக்கு ஏன் இத்தனை சாபங்களிருக்கிறதென்பதை. மர்மங்கள் ஏன் இத்தனை சிறிதாய் இருக்கிறதென்பதை. வாழ்க்கை ஏன் இத்தனை மறைவாய் பூக்கிறதென்பதை.

அவள் அல்குலை விழியால் காண்பவர் அறிவது இத்தனை சிறியதாய் சுவர்க்க வாயில் எங்கு அமைந்ததென்பதை. இத்தனை விரிவுடன் எம்மலர் மலருமென்பதை. இத்தனை சுரந்தும் எது துவராதென்பதை. இத்தனை ஒடுங்கியும் எது விரிவென்பதை. இத்தனை அறிந்தும் எது தீராதென்பதை.

அவள் கால்களைக் காண்பவர் அறிவது இனி மண்ணில் இப்படியொரு கால் நுழையாதென்பதை. இது இத்தோடு நின்றுவிடக் கூடாதென்பதை. இதை இப்படி யாரும் கண்டதில்லையென்பதை. எதை நினைத்து இவை இப்படித் தழைகிறன என்பதை. இதைத் தொட்டு எவரும் பின் தொடுகையை இழக்கலாமென்பதை.

அவள் அருளும் பொழுது தெய்வம். அடையும் பொழுது அணங்கு. நிகழும் பொழுது ஆடல். படரும் பொழுது வேட்கை. தினவும் பொழுது ஆற்றல். பிசையும் பொழுது பருவம். முற்றும் பொழுது சிலை. முகிழ்க்கும் பொழுது மது. தடவும் பொழுது தந்தி. மீட்டும் பொழுது நினைவு. பின்னும் பொழுது அந்தி. பிரியும் பொழுது விரகம். உறியும் பொழுது பேய். உறங்கும் பொழுது காமம்.

விருபாசிகையின் கூந்தலில் படிந்திருந்த பனி விலகாது உள்ளே நுழைந்து கூந்தலை ஒளிர்வு கூட்டியது. வாசலைக் கடந்து பதும்மையின் அறைக்குள் நுழைந்தாள். அவள் உடலில் முதற்காமம் அறிந்தது முதல் உடல் என்பது அவளுக்கு விழைவு என ஆகியது. இன்பம் எய்வது எந்நாணிலோ அதில் சென்று பொருதிக் கொள்பவளாகவே ஆகியிருக்கிறாள். அவளுக்குக் காமம் ஊழ்கத்தின் முதுநிலை. அவள் உடலில் எந்தத் தளைக்கொடியும் ஏறுவதில்லை. தன்னைத் தான் அறிந்து கொள்ளும் விசை நுழையப் பெற்றவள். தூண்டப்பட்ட முலைக் காம்புகளின் விழிகளென மேனி கொண்டவள். ஒவ்வொரு புலனும் ஒரு தீண்டலென அறிந்தவள். ஒவ்வொரு சரிவிலும் ஒரு புதுமலர் காண்பவள் போலப் புணர்வைக் கண்டு. உற்று. அறிந்தாள்.

பதும்மையின் அறையில் இருந்த ஆடியின் முன் தன் வதனத்தை நோக்கியபடி அசைவற்று நின்றாள். கூடத்திலிருந்து எழுந்த தீயிலைப் புகையின் வாசனை அவள் உடலை அலைத்து ஏற்றியது. முன்னை நாளிரவு தன் அல்குலில் நுழைந்த நிலவையின் நாவு நினைவில் புரண்டது. விழிகளை மூடி அதைக் கண்டாள். பணிவை எழ வைத்து அரசியின் நாவைப் பொருதியதை எண்ண எண்ண அவளுள் மதனம் குளிர்ந்தது. நிலவையின் நாவின் சொல்பேச்சுக் கேட்காத குழைவிலும் ஆக்கிரமிப்பிலும் கீழேயிருந்தாலும் தாழாத நிமிர்வையும் மோகித்தாள். “அவள் பேரரசியல்லவா. அவள் எங்கு தாழ நேரும் பொழுதும் அதிலொரு நிமிர்வையும் அடக்கமின்மையையும் அவள் காட்டித் தான் ஆகவேண்டும்” என எண்ணிச் சிரித்தாள். கொம்புப் புகையிழுப்பானை எடுத்து அதில் தேவ இலை மலர்களை நிறைத்து பற்ற வைத்து இழுத்து மலர்ந்தாள். நாசியில் மலர்களின் மயக்குபுகை வழிய மஞ்சத்தில் இறகென வீழ்ந்தாள். கால்களை அங்குமிங்கும் பரத்தினாள். அறை புகையாய் அசைந்தது அவள் விழிகளுக்குள். எழுந்து நின்று மெய்யை அறிந்தாள். அது நிரம்பி நிரம்பி உவகையென்றானது. இதழ்கள் சிரிப்பை விரித்துக் கொண்டன. விழிகள் தாபத்தைச் சுடரத்தொடங்கின.

அங்கினியின் அறையில் எழுந்த புகையும் மயக்கொலியும் அவளை இழுத்தது. எழுந்து பதும்மையின் அறைக்கும் அங்கினியின் அறைக்குமிடையில் இருந்த ரகசியமான சிறுவாசலால் கைகளை ஊன்றிக் கன்றென நடந்தாள். அங்கினியின் செழிமுலைகளில் வேறுகாடாரின் ஆண்குறி அடித்து விளையாடியது. ஒவ்வொரு அடிக்கும் அவள் ‘ஆ’ என்றாள். வெட்சிப் பழங்களெனத் திரண்ட காம்புகளை ஆண்குறி தீண்டும் பொழுது ‘ஓ’ ‘ஆ’ வெனச் சினமுயக்கில் கூவினாள். காமத்தின் எல்லா நாடக பாவங்களையும் அங்கினி தன் சொந்த அகத்தின் மெய்யென அறிவாள். அவளின் ரசபாவங்களை வியந்தபடி அவள் கூவலில் மிதந்த வேறுகாடார் தன் வெண்மயிரைச் சிலிர்த்த போது விருபாசிகை அவரின் கொல்லழகைக் கண் விழுங்கத் தொடங்கினாள்.

எழுந்த முதுபேருடல். யுத்த வீரனின் புயற்கரங்கள். விழிகளில் ரசமருந்தும் பணிவின் தாழ்கிண்ணங்கள். அயர்ந்தால் பாயும் கொடும்புலியின் காத்திருப்பு பாவம் பூண்டவர். அங்கினி அப்புலியின் வாலை எடுத்து விளையாடுவது போல் அவரின் ஆண்குறியை அள்ளி அளைந்து இதழோடு இதழ் சிந்திக் கொண்டாள். இருபெரும் காமுகர்களின் களியென அந்த மஞ்சம் திரை விலகியது. விருபாசிகை இருளில் வெருகெனச் சாய்ந்து அமர்ந்தாள். தன் மேலாடையை நீக்கி மார்புகளை அவிழ்த்தாள். அறைவாசல் திறந்து தீபவொளி இருகணம் மின்னி மறைந்தது. அறைக்குள் நுழைந்த முத்தினி புகையிழுப்பானை இழுத்தபடி அங்கினியும் வேறுகாடாரும் சிந்தும் இதழ்நீர் அவர்களின் மார்புகளில் வழிந்து மேனிகள் குழையும் வடிவை நோக்கினாள். முத்தினி அருகில் சென்று வேறுகாடாரின் சிறுமஞ்சமென மயக்குக் கொண்ட அரக்குப் பூசியது போன்ற வாளிப்பான தொடைகளை விரல்களால் அளைந்தாள். அவரின் விடைத்த குறி இன்னும் விரியமுடியாமல் தவித்துத் துடிப்பென ஆடியது. அவள் அவரின் குலைகளைத் தடிவினாள். கைகளுள் ஒளித்து அளைந்தபடி இருவரின் முகங்களையும் நோக்கினாள். இருவரும் ஒருவரின் மார்பை ஒருவர் தின்ன விசைகள் அகமும் புறமும் வீசும் வெளியென மஞ்சம் திறந்தது. முத்தினி மஞ்சத்தில் ஏறி நின்றாள். அவளின் ஆண்குறி எழுந்து முறிகூடியது. வேறுகாடாரும் அங்கினியும் இரை கண்ட பசித்த புலிகளென அவள் குறியை உண்ணத் தொடங்கினர். இந்தக் காட்சியின் பேரனுபவத்தில் அல்குல் சுனைத்து நீரோடையென்றாகிய விருபாசிகை ஆடை விலக்கினாள். இருளை விலக்கினாள்.

எழுந்து சிகை விரியக் காமத்தின் கொற்றவையென நிகழ்ந்த அவளின் சிற்றுடலின் பேரெழிலைக் கொத்து விளக்கின் தளிர்மஞ்சள் ஒளியில் மூவரும் நோக்கினர். வேறுகாடார் இருமா கரங்களாலும் அங்கினியையும் முத்தினியையும் தன் ஆண்குலையில் அழுத்தினார். அவர்கள் சுனை மீண்ட மீன்களெனத் துள்ளிக் குதித்தனர். இருவரின் பிருஷ்டங்களையும் சங்கைப் பிடிப்பது போல் பிடித்து குதவழியில் தடிவிரல் நுழைத்தார். அவள்கள் அலைந்து துடிக்க அழுத்திப் பினைந்தார்.

விருபாசிகை மோகத்தின் தெய்வம். பணிவையன்றி வேறெதுவும் அவளிடம் நெருங்கும் வழியல்ல. அவள் கோவிலின் கதவுகள் தலையைக் குனிந்து உட்செல்பவருக்கே இடித்துக் கொள்ளாதவை. தணிந்து உள்ளே நுழைபவருக்குக் களிவிருந்தின் ஆடலைத் தன்னுடனே ஆடிக்கொள்ளும் வரமருளும் கனிவு கொண்ட தேவி.

அவள் ஒருவளின்றி அத்தகையவள் மண் பிறந்ததில்லை எனப் பாணர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தும் பாடப் போகிற திகழ்வு அவள் வருகை. வேறுகாடார் தன்னுள் மிருகமென எழுவது எதுவென்பதை அகமறிந்தார். ஒருகாலை இன்னொரு காலின் மேல் பொருதி புரள்வின் குலைவென நிற்கும் இவள் தன்னைத் தாழ்த்தும் தலையிடமே துதியைக் குவிக்கும் வேழமென ஒரு பார்வையில் அறிந்தார். அவருள் எழுந்த ஆண் எனும் மிருகு அயர்ந்தது. அவள் ஒரு உடலல்ல என நோக்கினார். நோக்கி வியந்தார். இப்படியொரு இனிமையின் கனத்தை விழிகளில் சூடிய சிற்றிளம் பெண்ணை மட்டுமல்ல பேரிளம் பரத்தைகளைக் கூட அவர் அறிந்ததில்லை. அவளை இன்னும் எரித்தெழ வைப்பதே அவருள் எழுந்த ஆசையின் முதல் நா.

வேறுகாடார் முத்தினியை எழ வைத்தார். அவளின் ஆண்குறியை உருவினார். தன் பெருவாய்க்குள் கனியென ஊட்டிக் கொண்டார். உமிழ் நீர் தளம்பும் ஓசை மட்டுமேயென அவ்வறை ஆகியது. அங்கினி துடித்தாள். அவரின் முதுகை நாவால் அளைந்தாள். கீறினாள். முலைகளை முதுகில் அழுத்தி அவரின் நெஞ்சு மயிர்களைக் கிளைந்து மார்பை இழுத்தாள். முத்தினி இருகைகளையும் தொங்க விட்டபடி புயற்பரப்பில் நுழைந்து விட்ட தருக்கிளை என உலைந்தாள். வேறுகாடார் முத்தினியை வாயினால் உண்டபடி விருபாசிகையை நோக்கினார். அவர் எண்ணிக் கொண்டது போல அவரது விழிகளை அவரால் திரும்பவும் அள்ள முடியவில்லை. மேனியில் ஒரு துளி அசைவும் எழாமல் அவள் அவர்களை நோக்கினாள். உதட்டில் வெறுப்பினதோ தாபத்தினதோ இகழ்வினதோ ஒரு நரம்பும் அரும்பவில்லை.

மஞ்சத்தின் தலைப்பகுதியில் வேட்டை நாய்போல நான்கு கால்களில் அங்கினியை நிற்க வைத்தார். அவளின் கூந்தலைப் புரவியின் தோற் கயிறெனக் கைகளில் சுருட்டிக் கொண்டார். அங்கினியின் அல்குலில் தன் பெருநாவைத் துழாவினார். அங்கினி அலைத்தெழுந்தாள். தன் குறியை அவளின் குதவழி நுழைத்தார். நீள்மூங்கில் குழலொன்று வாயென மயங்கிக் குதவழி சென்றது போல் அங்கினியின் முனகல்களில் தேவம் மிளிர்ந்தது. அவளின் முகம் ரசபாவங்களின் நிறப்பிரிகைகள் எனச் சுழன்று சுழன்று மின்னியது. அவளின் கூந்தலைத் திமிறும் புரவியைப் பற்றியிழுத்து நிறுத்துவதைப் போல் தூக்கி இழுத்தார். கைகள் அந்தரத்தில் தூங்க பிருஷ்டங்கள் ததும்பிக் குலுங்க அங்கினியின் குரல் மெல்ல மெல்ல மிருக பாவம் அடைந்தது. அவளைக் கீழே தள்ளித் தோள்களை அழுத்தி இன்னும் இன்னுமென உள்ளே புழைந்தார். அவரின் நீள்குறி நிகரற்ற வில்வீரனின் தொடர் கணையென இலக்கேகியது. அங்கினியின் விழிகளில் நீர் பசிந்தது. சிம்மங்களென இருவரும் முயங்கி ஏறினர். முத்தினி தன் ஆண்குலையைக் கசக்கியபடி அந்த ரசவிளையாட்டை அளைந்தாள். வேறுகாடாரின் வியர்த்துப் பொலியும் காளையுடல் அவளை விறுக்காக்கியது. தீயிலையை இழுத்தபடி அக்களியில் அரூபவுடலில் நுழைந்தாள்.

அங்கினியின் முனகல் அலறலென மிதக்கத் தொடங்கியது. அவளின் பிருஷ்டப் புழையைப் புணர்ந்து கூடிக்கொண்டு அவர் விருபாசிகையை நோக்கினார். இம்முறை ஒரு நோக்கின் திருக்கணத்தில் அவரின் ஆண்குறி தழைந்து சுருங்கியது. அவள் தெய்வம். தெய்வம் மட்டும் தான் இப்பேரெழிலும் பெரும் செருக்கும் பூண இயலும். அவர் இதுவரை அறியாத ஒரு தெய்வம் அவர் முன் வரமென நிற்கிறது. அவரின் மிருகு ஒரு வளர்ப்பு விலங்கென வால் தழைத்து அமர்ந்தது. அவர் எழுந்தார். மூன்று நீர்க்குடுவைகளில் இருந்த நீரைத் தன் உடலில் கவிழ்த்தார். அங்கினி உடல் துள்ள மென்வலியில் சரரிந்தாள். முத்தினி அக் காட்சியை அகக் கண்ணில் என்றோ கண்டவளென விழிகளைத் திறந்து கொண்டே இன்னும் விரிய விரியத் திறந்து கொண்டே சென்றாள்.

விருபாசிகை எழுந்து கூடத்தில் நடந்து சென்றாள். இரவு நடுநாழிகை. நிலவு மஞ்சட் கூகையென வானில் அமர்ந்திருந்தது. விண்மீன்கள் துடித்துச் சிமிட்டின. அவள் கூடத்தின் மஞ்சத்தில் அமர்ந்தாள். ஒருகாலைத் தூக்கி அதில் கையைத் தொங்கவிட்டாள். தலையை உயர்த்தி வானை நோக்கினாள். அதன் எழிலில் எரிவது தான் எனச் சிரித்தாள். பின் புகையிழுப்பானை எடுத்து அகலில் மூட்டி உறிஞ்சினாள். வாயைக் குவித்து ஊதி ஊதி உறிஞ்சி உறிஞ்சி மலர் பற்றுமென உன்னும் அளவுக்குப் புகைப்பெருக்கை உண்டாக்கினாள். புகை பரவிப் பரந்து கண்கள் மயக்கில் நெகிழ்ந்தது.

வேறுகாடார் ஈரத்தேகத்துடன் கூடத்தில் ஒரு ராஜசிம்மத்தின் நடையுடன் வந்தார். அவரில் முன்னிலாத அமைதியும் நிறைவும் கூடியிருந்தது. அவளின் முன்வந்தார். அவள் விழிகளை உயர்த்தி அவரைப் பார்த்தாள். அந்தத் தீண்டலில் அவருள் ஆயிரம் சர்ப்பங்கள் எழுந்தன. இரண்டு பட்டுத் துணிகளை எடுத்துக்கொண்டு அவளின் கரங்களைக் கேட்டார். கொடுத்தாள். மஞ்சத்தின் மேற்கொம்பில் இருகைகளையும் பரத்தி அவளை மஞ்சத்தில் முழங்காலில் நிற்க வைத்துக் கட்டினார். பிருஷ்டம் பிதுங்க முலைகள் ததும்ப விழியில் தாபத்தின் நாக்கள் துடிக்க விருபாசிகை நிமிர்ந்தாள். பின்னால் வந்த வேறுகாடார் தன் ஈரவில்களால் அவள் மயில்கழுத்தின் ஒருசிறு மயிரைத் தொடுபவரெனத் தொட்டார். அந்த ஒரு மயிர் நுனியிலிருந்து ஒவ்வொரு மயிருக்கும் பரவும் அழற்களியொன்று மேனியில் எழுந்தது. தன் பேரிதழ்களை விருபாசிகையின் கழுத்தில் கவ்வினார். அவள் ஈரமெனக் குழைந்தாள். பெருங்கரத்தால் அவள் சிறு இடையை வருடினார். புன்மயிர் அல்குலில் நடந்தார். அவள் ஒவ்வொரு கணமும் பற்றியெழ நிற்கும் நெய்த்துணியென ஆனாள். கீழே படுத்துக்கொண்டு யோனியை நாவால் தடவி இதழ்களை அரட்டினார். அவள் மதனம் சுரந்த புழையை நா முற்றத் தொட்டளைந்தார். அவளில் புரவிகள் சிலிர்த்தன. எழுந்து முன் வந்து அவளை நோக்கினார். இப்பொழுது அவள் மோகத்தின் கரும்பென விளைந்து நிற்கிறாள் என்பதை அறிந்தார். “உனது பெயரென்ன அணங்கே?” என்றார். விழிகளை மலர்த்தியவள் “விருபாசிகை” என அகவினாள். “உன்னில் சகல மங்கலங்களும் பொலிகின்றன பெண்ணே. உன்னில் விழைந்ததை நான் என் நெடுவாழ்வில் வேறெதிலும் அறிந்ததில்லை. கொல்லும் போர்க்களத்தில் குருதி சீறிய தலைகளை நான் பார்க்கும் பொழுதிலெல்லாம் என்னுள் எழும் மிருகம் ஒன்றை நான் வளர்த்து வந்தேன். அது உன் முன் மூக்குரசி நிற்பதை உணர்கிறேன். உன் விழிக்கு உள்ளது ஆணையின் செருக்கு. தெய்வத்தின் அழிகளம். உன்னை நான் மிருகமெனக் கொள்ளவா” என்று தண்ணீரில் ஆடும் தண்மையில் குரெலடுத்து அவளிடம் இறைஞ்சினார்.

“மண்டியிடுங்கள்” என்றாள். அவள் கரங்களை அவிழ்த்து மண்டியிட்டு நின்றார். மண்டியிட்டால் மட்டுமே வெல்லும் போர்க்களம் உடல் மட்டும் தானென எண்ணிக் கொண்டார். அதில் தெய்வமென எழுந்தவளின் முன் மண்டியிடுவது ஒரு முத்தம் என அவருள்ளம் அக்கணத்தை அளந்தது.

அவர் நரைத்தாடியில் தொடைகள் உரச தோளில் வில்லெனக் கால்களை அழுத்தி அல்குல் அளித்தாள். நாத்திறந்த வேறுகாடார் போரின் முதற் சங்கின் வாயில் குவிவது போல் குவிந்தார்.

வாசித்தவர்கள் : 431

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,007)
  • காதலின் முன் பருவம் (1,998)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme