Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

44: ஓயா மழை : 02

Posted on June 27, 2024 by Kiri santh

“மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில அகல்கள் தழலாடின. எனது விழிகள் பாதி சரிந்து தூங்கின. என்னை ஏணையில் வளர்த்துபவர் போல கற்தரையிலிருந்த அன்னையின் பழைய செவ்வாடைகளின் மேல் வளர்த்தினார். தேகம் குளிரால் விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தது. சிறு பொதி மூடையிலிருந்து வெண்ணிறத் துணியொன்றை எடுத்து என் தலை துடைத்தார். உடுக்கை ஆடுவதைப் போல் என் தலை ஆடியது. முகம் கழுத்து மார்புகள் இடை யோனி தொடை கால்கள் கழல்கள் அடிப்பாதமென ஒவ்வொரு வரியாய் இறங்கித் துடைத்தார். என்னைச் சரித்து மீண்டும் புறந்தலை கழுத்து முதுகு இடை பிருஷ்டம் பின் தொடைகள் கால்கள் கழல்கள் அடிப்பாதங்கள் என முழுச்சுற்றுத் துடைத்து முடித்தார். அருகிருந்த அன்னையின் ஓவியம் வரையப்பட்ட திரைச்சீலையை அவிழ்த்து என்னைப் போர்த்தினார். தேகம் கதகதத்தது.

அவருடைய தீயிலைத் துதி மான்கொம்பின் வாளிப்புள்ள மூங்கிலால் ஆனது. தேவ இலை மலர்களை அடுக்கி அகலில் மூட்டினார். என் தூங்கும் விழிகள் சற்று விரிந்து உதடுகள் பிரிந்தன. என் உதட்டில் துதியின் வாயை வைத்தார். சுடுகாற்றை இழுத்து தேகத்தை உலர்த்துபவளெனத் துதிப் புகையை இழுத்தேன். அகம் திக்திக்கென ஒலிப்பது கேட்டது உதடுகள் ஒவ்வொரு இழுவைக்குமென வறண்டன. தாகமென உதட்டில் ஒலியெழ தன் சிறுதோல்பையிலிருந்த நீரை உதட்டில் ஒற்றினார். மெல்ல இதழ்கள் நனைத்து நாக்குளிர்ந்து நீர் நரம்புகளில் கரைந்த போது என்னை நான் இருப்பென அறிந்தேன். அவர் ஊழத்திலென என்னருகில் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்தார். தீயிலையைப் புகைத்து என்னை நோக்கி ஊதினார். அதன் நறும்புகை என்னைச் சிறகுகள் கூசி உலர்த்தும் பறவையெனத் தீண்டியது. புகைக்கரங்களால் தொடுகிறார் என எண்ணிக் கொண்டேன். வெளியே விழிகளுக்கு நேரே மழை தன் முழுவிசையுடன் மண்ணுக்கும் விண்ணுக்குமிடையில் தீராமல் அம்புகள் எழுவதும் வீழ்வதுமெனக் கணமிடை வெளியின்றி வைரத் திரையென மயக்குக் கொண்டது. அவரிடம் சொல்லிருக்கவில்லை. எனக்குள் சொற்கள் பாசி கூடுவதைப் போல் நிரம்பத் தொடங்கின. ஒரு சொல் என் அகத்தில் அப்பாசிகளை அகற்றி நீரைத் துலங்கச் செய்யுமென எண்ணினேன். என்ன சொல்லென அகம் துழாவத் துழாவ வெறும் உடலென எஞ்சினேன். அவர் எங்கு அமைந்திருக்கிறார் என அகம் ஒருகணம் கண்டு திரும்பியது போல் உணர எழுந்து சுவற்றில் சாய்ந்து திரைச்சீலையைப் போர்த்தபடி அமர்ந்தேன்.

“நீங்கள் யார்” என்ற வினா அப்பொழுதிற்குத் தொடர்பேயற்றதென உதட்டிலிருந்து தவறி விழுந்தது. பின்னர் அதுவே முதல் கேள்வியென உளம் அமைதியடைந்தது.

அவர் மெளனத்தைத் திறக்காமல் என்னைச் சிலகணங்கள் உற்றார். உற்றபடி குயிலின் குரலில் “நான் நானே தான் பெண்ணே. எனது பெயர் பிறருக்குரியது. நீ என்னை நேரறிந்தவள். உனக்குப் பெயர்களால் என்னை அறியும் இடர் தேவையில்லை” என்றார்.

அவர் குரலைக் கேட்ட போது இதயம் விம்மியது. கண்ணீர்த் துளியென மேனி திரண்டுவிடுமோ என அஞ்சினேன். ஆயினும் ஏற்கெனவே உருக்கொண்ட துளியொன்று என்னிலிருந்து வீழ்ந்த போது கழுத்திலும் கரங்களிலும் மெய்ப்புல்கள் எழுந்தன. கழுத்தில் நரம்பொன்று வெட்டித் துடிப்பதைக் கேட்டேன். அவரது சுவாசம் நிதானமாக அனற் துளியொன்று அசைவற்று நின்றிருப்பதைப் போல் அமைந்திருந்தது. எனது அகத்தில் ஈசல்கள் பொருமிக் கூட்டமென எழுந்தவை போல் வினாக்கள் பெருகின. ஒளியினடி நீரில் சென்று அவை வீழ்பவையென அவர் அகத்தை மோதிமோதி அழிந்தன.

சில கணங்களின் பின் இன்மணங்கள் அங்கு எழுகின்றன என எண்ணமெழுந்தது. நான் மெல்ல என் குரலை மீட்டிக் கொண்டு “நான் யார்” எனக் கேட்டேன். அவரின் உடல் இள நகையென விரிவது போல் தோன்றியது.

“பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் விழைவென ஆக வேண்டிய ஒன்று. அவள் பக்தி கொள்கையிலேயே அரூபமென ஆகிறாள். பதினெண் நாக்கொண்ட தீபத்தூளியென அவள் தலை முதல் கழல்கள் வரை தீமுகம் சூடியவள். அம்மை தழலென ஆகியிருப்பது அதன் நோக்கிலேயே. கருவைச் சுமப்பதால் பெண் கருவூலமென மானுடரில் உறைகிறாள். பிறப்பை அளிப்பதால் பெருங்கொடையை நிகழ்த்துகிறாள். கருணையை உண்டாக்கியதால் தீரா வஞ்சம் கொள்கிறாள். அன்பை அறிவதால் முடிவிலாச் சலிப்புகளை அணிந்து கொள்கிறாள். இச்சைகளை அணையிட்டுக் கொள்வதால் பெருநதியெனப் பெருக்கிறாள். துயரைப் பெறுவதால் அகத்தைத் தானென உணர்கிறாள். மானுடரின் விழைவுகளை அச்சிறு கருப்பையென ஆக்கிக் கொள்கிறாள். தன் கனவுகளை உயிரணுக்களென உடல்களாக்கி மண் அனுப்புகிறாள். அவளில் இல்லாத பிறிதொன்று மண்ணிலில்லை. அவள் சொற்கள் ஆணையெனப் புடவியை ஆள்பவை. அதை அறியாத உளங்கள் பேதமையில் திளைக்கின்றன. அறிந்தவர்கள் தம்மை அதற்கு முற்றளிக்கின்றனர். ஒவ்வொரு மானுடருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் விழைவை அவர்கள் துறக்க முடியாது. நான் துறக்க எண்ணியவன். என் காமத்தை ஒரு அச்சமென எண்ணியவன். அதைத் துறக்கவே கானகமேகியவன். நான் துறவை நெருங்க நெருங்கக் காமம் பேருருக் கொண்டு என்னை விழுங்கியது. ஒவ்வொரு ஊழ்க்கத்திலும் ஒவ்வொரு திவலையெனக் காமத்தில் மூழ்கினேன். ஒவ்வொரு விலங்காகிக் காமம் புரிந்தேன். காணும் ஒவ்வொரு மானுடரையும் கலவி கொண்டேன். அழகு என்பது காமத்தில் சுடரும் நெய். ஞானமென்பது சுடரும் தீயின் வெளிச்சம். அதனுள் கொள்ளும் அனல் யாவற்றுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. தேகம் விழைவெனச் சூடிய மானுடரின் அகம் தானே தனிப்புடவியொன்றாகிறது. தன் விதிகளைத் தானே இட்டுக் கொள்கிறது. மெய் விழைவால் உண்டாகும் கலவி ஊழ்க நிகரென்றாவது. புற விதிகளால் தளையுண்ட காமம் கலவியை அறிவதில்லை. கலவியின் உச்சங்களில் மிதக்கும் உளங்கள் விதிகளெனும் தூங்கும் கற்பாறைகளை அவிழ்த்து விண் எழுபவை. காமம் அனலும் புனலுமானது. கலவி அம்மையும் ஈசனுமென ஆவதைப் போல.

நீ என்பது உன் விதிகளின் தொகுப்பு. உன் விதிகளை நீயே ஆக்கிக் கொள்வதில் குற்றவுணர்வை நீங்குகையில் நீ எளிய குடிகளிலிருந்து உன்னை வெளியில் சென்று அமைத்துக் கொள்கிறாய். அவ்வெளியில் உனது உணர்வுகளைக் கொண்டு அகத்தை வனைகிறாய். உன் கனவுகளை ஆக்கிக் கொள்கிறாய். உன் கனவுகளே நீ என்பதை அறிக. உன் கனவுகளை எதன் பொருட்டும் கற்சிலைகளென உண்டாக்காதிரு. அதற்கு மேகங்களின் இறக்கைகள் கொள். ஆயிரமாயிரம் இதழ்கள் திற. மேனியென்பது திறந்து தீராத தொல் சுரங்கம். உன்னுள் ஆயிரமாயிரம் மானுடக் கனவுகள் விழைவெனக் கூட அனுமதி. எளிய இச்சைகளை ஆள். உன்னைக் கொல்லும் விழைவுகளை வெல். உவப்பில்லா உடல்களை உதறு. உனது உடல்களை அணைத்துக் கொள். விழைவை முற்றறிந்து கொள்ள இயலாது என்பதை அறி. அவை பற்றிச் சொல்லப்பட்டிருப்பவை எல்லாமே அக்கண மதிப்புகளே. நீ புதிதாக ஒன்றைச் சொல்லிக் கொள்ளும் போது புடவி உன்னைச் சூடிக் கொள்ளும். உன்னை ஏற்காத ஒன்றும் இங்கு இல்லை. உன்னில் விளையும் எதுவும் தீங்கு இல்லை. நீ பெண். ஆதலால் நீ ஆக்குபவள். அருளுபவள். காப்பவள். அளிப்பவள். மறைப்பவள்.

உன்னைப் பெண்ணென ஆக்கும் எளிய விதிகளைக் குடிகள் சமைக்கின்றனர். பெண் உடமை விரும்பி. தன்னை அண்டும் ஒவ்வொன்றையும் உடமையென விழையும் இச்சை கொண்டவள். அனைத்தும் தன்னில் உண்டாகியவை என்ற ஆதி எண்ணம் அவளில் குடியிருக்கிறது. தனக்கென இப்புடவியை வகுத்து உரிமை கொள்ளும் இச்சை பெண்ணுக்குரியது. உள்ளங்கையளவு மண்ணென்றாலும் அது அவளுக்கு மட்டுமே என எண்ணுபவள். தீரா உடமையுணர்வே பெண்ணன்றறிக. அதுவே அவளின் முதன்மைத் தளை. அதை அவளால் நீங்க ஒண்ணாது. நீங்கும் தோறும் தானொருத்தி இல்லையென்ற உணர்வை அடைகிறாள். உடமை கொள்ளப்படுபவற்றின் அளவினால் அல்ல. விழைவினாலேயே பெண் அகத்தை நிறைத்துக் கொள்கிறாள். தனக்குரியதெனப் பெண் உணரும் ஒன்றின் ஒரு அணுவும் பிறரிடம் உடமையென ஆவதை அவளால் அனுமதிக்க இயலாது. அவள் தன் உடமையுணர்வின் கைதி. காதல் உடமை உணர்வுகளில் உச்சமானது. அதைக் குடிகள் வரையறைகளின் மூலம் நெறிக்குட்படுத்தினர். காவியங்கள் மூலம் காதல் அகங்களெனச் சமைக்கப்பட்டன. அதன் விதை உடமையுணர்வில் ஊன்றியிருக்கிறது.

பெண் முழுதாற்றல் கொண்டவள் என்றாலும் அவளால் அங்கனம் வெளிப்பட்டு புடவியை வெல்ல இயலாமைக்குரிய அடிவிதை உடமையுணர்வுகளின் பெருக்காலும் நான் என்ற பெண்ணின் தனிப்பெரும் ஆணவத்தினாலும் விசையிழுபடுகிறது. ஆக்கிய கனவைத் தன் சொந்தச் சிறையெனப் பெண் ஆக்கிக் கொள்வது அவ்விசைகளாலேயே. ஆணவத்திலிருந்து ஓரடி விலகும் பெண் தன் உடமையுணர்வு குலைவதை அஞ்சுகிறாள். அவள் அவ்வுணர்வே தான் என எண்ணுகிறாள். எஞ்சும் தோறும் அவள் தன் சிறைக்கே திரும்புகிறாள். ஆணை உடமையென எண்ணும் பெண்கள் அவனைத் தன் சொந்தச் சிறையில் வைத்துக் கொள்ள இடைவிடாது முயல்கிறார்கள். முயலும் தோறும் ஆண் தன் சொந்த விழைவுகளை நோக்கி எழுகிறான். அவனது காமம் தொல்விலங்கின் குளிர் மூச்சு. அதற்கு அன்றைய வேட்டையின் நுகர்வே உண்டு. நேற்றும் நாளையும் அற்ற வெறும் விலங்கென அவனால் ஆக முடியும். அதனாலேயே அவன் உடமையுணர்வை நீங்குவது எளிதாகிறது. ஆழத்தில் அதை அறியும் பெண்கள் அவனை அவன் விழைவுகளை ஒன்றின் கீழ் ஒன்றென ஆக்கிச் சமைத்துப் புடவிக் கனவை அளிக்கிறார்கள். புடவியை ஆண்டு தருக்கும் கனவை ஆணுக்கு ஒரு எலும்புத் துண்டென வைக்கிறாள் உளம் கூர் பெற்ற பெண். அதன் எல்லைகளை அவளால் வரைய முடியும். அவனுள் உறையும் காமத்தை அவள் நெறிப்படுத்தவில்லை. மடையளிக்கிறாள். கனவளிப்பதன் மூலம் அவனது காலத்தை வென்று சூடிக் கொள்கிறாள்.

பெண்ணே. மண்ணாழத்தில் ஓடும் ஊற்று அனைத்திலும் தொட்டு மண் மேல் விதைகள் தழைப்பதைப் போல காமம் விசை கொண்டது. பொருளாதாரத்தில் குடிச்சிக்கல்களில் அதிகாரத்தில் ஞான வழிகளுக்கிடையில் வரலாற்றில் போர்களில் வெற்றிகளில் தோல்விகளில் அனைத்திலும் ஆழத்தில் நிற்கிறது. கலவியை விடுதலையெனக் கொண்டவர் பிறர் எவரும் அறியாமல் புடவியை வெல்கிறார். அறியும் புடவி வெல்லும் தோறும் விரிவது. அறியும் காமமும் அத்தகையதே. ஆனல் காமம் புலன்களினால் அடையப்பட்டு மெய்ம்மையினால் அளவிடப்படுகிறது. புடவியில் மகிழ்வு மட்டுமே வாழ்க்கையை அளக்கும் படிக்கல். அதற்கு ஈடாக எந்தப் பெரும் கனவுகளும் நிகர் செய்ய இயலாது. மண்ணில் தோன்றிய அறங்கள் எல்லாம் அடிப்படை விழைவுகளைத் தளை செய்யவே. விழைவு நெறி கொள்ளாமல் மானுடர் கூட்டாக வாழ இயலாது. அவை அக்காலகட்ட நெறிகளென்றே பொருள் கொள்ளப்படும். மாறா நெறிகள் எளியவை. அவை எல்லா விலங்குக் கூட்டங்களுக்கும் அடிப்படையானவை. சொல்லில்லாமலேயே உணரக்கூடியவை.

உண்டி. ஓய்வு. துயில். கனவுகள். இசை. ஓவியம். கதை. ஆடல். இன்னும் கொட்டிக் கிடக்கும் புலினின்பங்கள் அனைத்தும் விழையும் காமத்திற்கும் நிகர் நிற்க இயலாதவை. அதை எளிய குடிகளுக்கு அறிவென அளிக்க இயலாது. அதற்கான உள்ளிருப்பு ஒருவருக்கு அவரின் உயிரணுவில் அளிக்கப்பட்டிருக்கிறது. நீ உன் தேகத்தைத் திறக்கும் பொழுது ஒரு புதிய தெய்வத்தை உண்டாக்கிக் கொள்கிறாய். உன் அகத்தை அதன் காலடியில் மோதி உடைக்கும் பொழுது அக்கற் தெய்வத்தின் மேனியில் மெய்ப்புல்கள் எழுந்து விழியும் பருவுருவும் கொள்கின்றது. ஆணை வெல்ல எளிய கனவை அளிப்பவள் குடிப்பெண். தெய்வம் அவனைத் தன் முன் மண்டியிடச் செய்வது. உருகி அழியச் செய்வது” என்றார்.

அவருடைய சொற்கள் என்னில் பொருளாக எழவில்லை. எங்கிருந்தோ தொலைவில் ஒலிக்கும் தொல்நூலை வாசித்துக் கொண்டிருப்பவரென அவர் அமர்ந்திருந்தார். நான் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எளிய உளம் என அமைந்திருந்தேன்.

“நான் பரத்தையர் குடியில் பிறந்தவள் அய்யனே. விழைவைக் கலையென ஆக்கும் பயிற்சி பெற்றவள். ஆனால் உங்களுடன் கலவி கொள்கையில் நான் காதலிலிருந்தேன். ஓம். அதை மெய்யாகவே என்னால் உணர முடிகிறது. உங்களில் எழும் காதலற்ற கலவி என்னை நடுங்கச் செய்கிறது. காதலின்றி ஒன்றைத் தொடுவது என் விரல்களால் இயலாது. என்னை விழைபவர்களைக் கூட ஒரு கணம் காதலித்தே உடல் தொட அருகுகிறேன். எனக்குள் என் காதலை விலகுவதற்கு எக்காரணமும் எழவில்லை. அது எதனால்”

தன் குழலைக் கலைத்து முடிந்து கொண்டு எழுந்து சென்று கருவறைப் படிக்கட்டின் மேற்படியில் அமர்ந்து கொண்டார். அன்னையின் அடியே ஒரு பூதமென அவரை உளம் எண்ணியது.

“பெண்ணே. காதல் மெய்யுணர்வெனப் பெண்ணில் நிறைந்திட்ட ஒன்று. அதன் பொருளை அவர்களே ஆக்கியவர்கள் என்பதால் அவ்வுணர்வை நீங்குவது இயலாதது. அவர்கள் காதலை இழப்பது மட்டுமே ஞானத்தை அறியும் வழி. காதல் உலகியலை மட்டுமே அளிக்கும். தெய்வத்தின் மீதான காதலும் கூடப் பேருடமை கொள்ளும் விருப்பன்றிப் பிறிதில்லை. கலவியில் நீ காதலித்தது என்னையல்ல. உன்னை. உன்னிருப்பை. அதைத் தெளிவாக நோக்கு. காதல் பிறரிடத்திலிருந்து பெண்ணுக்குள் பொழிவதல்ல. அடிப்படையில் பெண் தன்னை மானுடரின் உச்சிக் கிளையில் அமர்த்தி கீழிருந்து வழிபடும் பல்லாயிரரை விரும்பும் தொல்தெய்வம். அவள் காதல் கொண்டிருப்பது தன் இருப்பின் மேல். தன் அழகின் மேல். தன் செருக்கின் சிறகுகளாலேயே அவள் உச்சியை அடைகிறாள். அவளது மேல் மனம் அவற்றை நம்ப மறுக்கிறது. பல்லாயிரம் பேரால் வழிபடப்படும் பெண் தன் காதலை உணர்ந்து கொள்வது தன் இருப்பின் அழகினால் உண்டாகும் செருக்கின் வழி. அது புண்படும் தோறும் அவள் இறங்கி வீழ்கிறாள். சினம் கொண்டு அனைத்தையும் அழிப்பவளாகிறாள். அனைத்தும் பிறிதிலிருந்து உண்டாகித் தன்னை அழிக்க வருகிறது என எண்ணிக் கொள்கிறாள். தன்னை ஒரு கணம் வெறுக்கும் பெண் பிறிதை எக்கணமும் வெறுப்பவள். பிறிது அளிக்க மறுத்தவற்றால் அவ்வெறுப்பை ஒரு அணியெனச் சூடுகிறாள்.

உற்று நோக்கு. உன்னால் ஆணை ஒரு போதும் வெல்ல முடியாது. அவன் விழைவை நெறிப்படுத்தி எளிய வாழ்க்கைக்குள் சிறைப்படுத்த இயலும். ஆனால் அவ்வெண்ணமே உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொல்லும். முதுமையில் நீ அவ்வெற்றியை பொருள் கொள்ள முடியாது. ஆணின் நிகரெனப் பெண் ஆவது அவன் விழைவை அவனே அழித்துக் கொள்ளக் கொடுக்கும் அனுமதி. அவன் விழைவை அவனே அழித்துக் கொள்ள அவன் பெண்ணிடமே வந்தாக வேண்டும். அப்போது அவனை வென்று அமை. வெல்லும் உணர்வு தீங்கானதல்ல. அது ஒரு மகிழ்வு. ஆனால் எல்லா உணர்ச்சிகளையும் வெற்றிகளையும் போல அதுவும் நிலையற்றது. மீண்டும் ஒரு வெற்றி வரை உன்னை நீயே அளைந்து கொள். உன் அகத்தை விரித்து உன் விழைவை முற்றறி. அதை ஒரு நோன்பென இரு. ஆணால் பெண்ணை ஒறுத்து தன் விழைவை வெல்ல இயலாது. அவனை அறிவதற்கு முன் உன் காமத்தை முழுது கொள். உடலைத் தளையிடும் குடிநெறிகளை உதறி நில். உனது நெறிகளை யாத்து உனக்கே அளித்துக் கொள். பெண் ஏற்றுக் கொள்ளும் நெறியே பெருநெறியென்று பின்னர் புடவியை ஆள்கிறது. அதன் முதன் வாயில்களில் ஒன்று நீ.

எவரும் தம் குடியால் அல்ல. தான் இயற்றும் செயலில் முழுதூன்றிப் பிறதற்ற மகிழ்வொன்றை அடைவதே மானுட முழுமை. உன் செயலை அறி. அதில் திளை. அதில் மற. அதை நினை. அதுவென்றாகுக. உன்னை இழப்பவற்றிற்கு உன் காலத்தை அளிக்காதே. அதை ஒரு நோன்பெனக் கடைக்கொள். விசையிழக்காத ஊற்றை அணி. பொலி. களி. விழை. வெல். அமை. நீள். வாழ்.

என்னை நீ கலவி கொள்கையில் காதல் கொண்டது இப்பேருடலை ஆளும் செருக்கின் தினவு. உன்னுடலில் மின்னிட்டவை காதலெனச் சூடிக் கொண்ட பொய்மைகள் உதிர்ந்து மேனியென உன்னைக் கண்ட திருக்கணம். இக்கணம் நீ உன்னை அறிவது உன்னுடலை அறிவது மட்டுமே. நான் ஒரு ஊழ்கக் காமம் மட்டுமே” என்றார்.

அவர் சொற்களை அப்போது மந்திரப் பாடல்களின் வரிகளெனக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். அவரது சொற்களை அளக்காது எனக்குள் சேர்த்துக் கொண்டேன். எழுந்து திரைச்சீலையை உதறினேன். தீயிலைத் துதியை மலர்களிட்டு மீண்டும் மூட்டிக் கொண்டேன். புகைத்தபடி சிம்மங்களின் உடற் தினவொன்று என்னில் ஏறியதென குறுக்கு நெடுக்காக நடந்தேன். என்னில் மழைக்காற்று மோதி எளிய பணிதல்கள் அகன்றன என்பதை நோக்கினேன். நான் பணிவை இழந்தேன். முன்னிருப்பவரின் ஆண்மையை ஒரு பருப்பொருளெனக் கண்டேன். அதனுள் உறையும் விலங்கை நோக்கிக் காத்திருப்பவளென அவரருகே சென்று நின்று என் பொலியும் உடலின் வேட்கைத் தீயால் அனலென்றானேன். அவரது தோள்களை ஒரு கையால் தடிவி அதன் மென்மயிர்களை அளைந்து கொண்டே துதியைப் புகைத்தேன். அவர் மேனி புன்னகைத்ததை என் கரங்கள் உணர்ந்தன. நான் கற்சிலையான காமத்தின் கொல்விலங்கென அவரை நோக்கினேன். என்னுள் எங்கிருந்து எழுந்தாளெனத் தெரியாத தெய்வமொன்று குடிகொண்டதை அன்றறிந்தேன். அவர் தலையை உயர்த்தினேன். அவரது அடர்தாடி குத்தும் நீளம்புகளென நீண்டிருந்தது. தடித்துக் கானகமாகிய மீசை. சுவைக்காத இதழ்கள். இரு பிலவுகளென ஆன பெரும் மூக்கு. விழிகளில் நெய்ப்பந்த ஒளி. நுதலில் கரைந்த நீறு ஆகாயத்தில் பரவிய மேகக்குவைகளெனப் படிந்திருந்தது. அவரது ஆண்குறியை நோக்கினேன். அது முதற்கணம் எத்தோற்றத்தில் அமைந்திருந்ததோ அப்படியே நிலை கொண்டிருந்தது. அதைச் சுறியும் சுருள் முடிகள் அடர்ந்து குலைகள் இருகனிப்பந்துகளெனத் தூங்கின. அவை சிறு கொய்யாக்கள் என எண்ணிய போது இளஞ் சிரிப்பொன்று என்னில் எழுந்தது. அவடது இடத்தொடையில் அமர்ந்தேன். பிருஷ்டங்கள் குளிர்க்கல்லில் அமர்ந்தது போல் தண் கொண்டன. வலக்கரத்தை அவர் தோள்களில் போட்டேன். என் வலமார்பின் காம்பு சிறுபிளவு கொண்ட நாவற்பழமென விடைத்து நின்றது. கரத்தால் அவர் தலையை என் மார்பில் தாழ்த்தினேன். அவர் நா முதற் தொடுகையென என்னைத் தொட்டது. மேனி ஒரு மின்பெருக்கெனத் துடித்து அணைந்தது. அவர் நாவால் காம்பைச் சுற்றினார். விக்கிரகத்தை சுற்றும் பக்தனென எண்ணிக் கொண்டேன். காம்பைத் தவிர்த்து முழு முலையையும் எச்சிலால் குழைத்தார். காம்பு நாவென முளைத்து என்னைத் தீண்டு எனக் கெஞ்சியது. ஒரு கணம் அக்கெஞ்சல் என்னுள் எங்கெழுகிறது என நோக்கினேன். என்னுள் அமைந்த பெண். அவள் கெஞ்சுபவள். தீண்டக் காத்திருப்பவள். அவளை சிம்மப் பிடரியெனச் சிலிர்த்து அகற்றினேன். என்னுள் விழைந்த காமம் அடக்குவதற்குரியது. தாழ் பணிந்து கிடக்க அவனை இட்டுச் செல்வது. என் விசையில் நிலை கொள்வது.

அவரின் மேல் எழுந்த பக்தியும் மதிப்பும் என் நாணமென அகன்றன. விழியில் தாபம் திரிகளென எழுந்தது. தீயிலைப் புகையால் நெஞ்சு நிறைத்தேன். கண்கள் மயக்கெழுந்தது. அகம் சொல் சொல்லெனக் கூவியது. உன்னைச் சொல். உன் வேட்கையை வெல் என்றது. அவரை விழி நோக்கி “மண்டியிடுக” என ஆணையின் குரலில் சொன்னேன். கணம் நிலை கொள்ளாமல் படிக்கற்களின் இறுதியில் வந்து அமைந்தார். நான் மேற்படிக்கட்டில் அமர்ந்து என் தொடைகளை இரு சிறகுகளென விரித்தேன்.”

அங்கினி தொடர்ந்து சொல்லச் சொல்ல பதும்மையில் ஆண் எழுந்தான். அங்கினியின் தொடைகளை வாழை இலைகளென விரித்தாள். அவள் சொல்லில் எழும் கணத்தை நிகர் நின்று நடிப்பளென அக்கனவில் தானே எழுபவளென ஆனாள்.

“அவன் இளம் சிறுத்தையென நான்கு கால்களில் என் முன் பணிந்து விழி உயர்த்தி நோக்கினான். அவன் எளிய ஆண். விலங்கு. என் வேட்கையைத் தணிக்க நான் கொள்ளும் பொருள். என் உடமை. அவன் என்முன் பணிந்ததைப் பார்த்த போது என் பெண் அகன்றிருந்தாள். அங்கு நான் கலவியின் பெருக்கில் சுனையென நின்றிருக்கும் ஒருத்தியைக் கண்டேன். அவளே நானென அறிந்தேன். அவள் அவனை ஒரு விரலால் அழைத்து இரு கரங்களையும் படியில் சாய்த்துக் கொண்டாள். அவன் அழைப்புக் கிடைத்த ஆணென யோனியை முகர்ந்தான். அதன் இன்மணத்தில் தன்னை போதையென்றாகிக் கொண்டான். அவன் உமிழ்நீரால் என்னை வணங்கினான்.

திருமுழுக்காட்டும் தெய்வத்தில் சொரியும் நீரையும் பாலையும் மஞ்சளையும் இளநீரையும் எதுவெனக் கண்டேன். என் முன் அவன் வெறியுற்றான். அவன் வெறியில் திளைத்து விரல் நுழைத்து அல்குல் விரித்த போது என் அகத்தில் கோடி கோடி பல்லாயிரம் கோடியிதழ்கள் செம்மையில் கருநீலத்தில் மென்மஞ்சளில் தூவெள்ளையில் அவிழ்ந்து கொண்டேயிருந்தன. அல்குல்லை ஆயிரம் மலரெனக் கண்டவன் என் முன் பணிந்தால் அதைக் கோடி கோடி யுகங்களின் பிறக்கும் இதழ்களென அறிவான் என எண்ணினேன்”

பதும்மை தன் இரு விரல்களை அவள் புழைக்குள் நுழைத்தாள். கசிந்து தளம்பும் சுக்கிலக் குழைவென அங்கினியின் அல்குல் மதனமுற்றிருந்தது. அதை நாவால் நக்கியபடி விழியுயர்த்தி அவள் கதையைக் கேட்டாள்.

“அவன் என் தொடைகளை நாவால் பிரண்டான். இடக்கால் விரல்களை அவன் வாயில் நுழைத்தேன். கரும்பென அவற்றைச் சுவைத்தான். அடிப்பாதத்தை நக்கி வாயில் நுழைந்து உறிந்தான். அல்குலில் புரவியென விரல்கள் ஏகின. மயிர்க்காட்டை பிறவிரல்கள் அளைந்தன. அவன் அவன்களென மாயத் தோற்றமெழுந்தான். தீயிலையை இழுத்து இழுத்து நெஞ்சை மயக்கில் எழுப்பினேன். விசை எரிதீயென என்னைக் கொழுத்த எழுந்து நின்று அல்குலை ஆண்குறியென அவன் வாயில் திணித்து இழுத்தேன். அவன் என் அல்குல் இதழ்களைச் சப்பி இழுத்தான்.

அவன் குறியை அளைந்தேன். அதில் விம்மும் துடிப்பைக் கேட்டேன். அவனை ஆயிரம் ஆடவர்களென எண்ணிக் கொண்டேன். அவர்களின் தினவென ஒற்றை ஆண்குறி. பால் வழியும் சிவலிங்கம் நினைவில் எழுந்தது. அவன் செவிகளைக் கடித்து உறிந்தேன். நாவால் அவன் நாவுடன் போர்புரிந்தேன். நாகதேவிச் சிலையின் மேலே ஒற்றைக் காலைத் தூக்கி வைத்தபடி அவனைப் போர்வையென முதுகில் இழுத்தேன். பேருருவன் என்னுள் நுழைந்தான். அல்குல் சீறல்களால் செருக்காடியது. அவன் நுழைவுகளால் விழிகள் நீர்கசிந்தன. என் முலைகளைப் பிசைந்து இறுக்கினான். பின்சாய்ந்து அவன் மார்பில் அழுத்திக் கொண்டு புணர்வு முனகலை கூட்டினேன். என் வாயில் அத்தகைய கீதங்கள் எழுமென அதுவரை நான் கேட்டதில்லை. ஒவ்வொரு முனகலிலும் ஒவ்வொரு பேருருக் கொண்டேன். ஒவ்வொரு பெண்ணென வேடம் புனைந்தேன். அவளென அவனை எண்ணச் செய்தேன். ஒரு மயக்கென என்னைச் சூடச் செய்தேன். அவனை வென்றேன் என அறிந்த கணம் என் அகம் திக்கற்ற வெளியில் மிதந்தது. அவன் என்னுடையவன் என்றானான். என் அகச் செருக்கின் பணியாளன். என் அடிமை. என் விலங்கு என முயங்கினான்.

பதும்மை எழுந்து அங்கினியின் முலைகளை உண்டபடி தன் யோனியால் அவள் யோனியை அழுத்தினாள். பதும்மையின் முலைகளை அங்கினி தடவிக்கொண்டு “அவன் என்னை விழுங்கும் காமமல்ல. அவன் நான் வெல்லும் போர்க்களம் என அறிந்தேன். திரும்பி நாகதேவியின் மடியில் அமர்ந்து கொண்டு கால்களைப் பரத்தினேன். புணர்ந்தான். புணர்ந்தபடி மார்பு குடித்தான். இதழ் சுவைத்தான். பித்தேறினான். மழைநீர் எங்களைச் சுற்றி இரு பின்னல் சர்ப்பங்களெனக் கிளைகொண்டு ஓடியது. அவனை இழுத்து அவன் ஆண்குறியை உண்டேன். நிமிர்ந்து வான் நோக்கி இடையில் கையூன்றி நின்றான். அவன் கரங்களை இழுத்து என் சிரசில் வைத்து அழுத்தினேன். என் தலையை மோதி உடைத்துக் கொல்பவனென அவன் ஆண்குறியில் அழுத்தியெடுத்தான். அவன் குறி பாற்பெருக்காடியது. வாய் நிறைந்து ஊறியது. குடித்தேன். உறிஞ்சி அவன் ஆன்மாவைக் குடிப்பவளென ஆடினேன். அகம் மிதந்து ஏறியது. அவன் என்முன் அணைந்து ஒளிர்ந்தான். கற்சிலையில் சாய்ந்தபடி ஒருகாலைத் தூக்கி வைத்து அருளளிப்பவளென என்னை அறிந்தேன். அவன் என் கழல்களில் முத்தமிட்டுத் தலை ஒற்றினான்”

அங்கினியின் வாய்க்குள் தன் முலைகளை இட்டு நிரப்பினாள் பதும்மை. இருநாகங்களின் புணர்வென மஞ்சத்தில் சுழன்றாடினர். அல்குல்கள் பெருக்கெடுத்துச் சீறியாடின. பதும்மை உடல் சீற அணைந்து சரிந்தாள். அங்கினி அவளின் தலையைக் கோதிக்கொண்டு துதியை மூட்டினாள். புகை ஒரு தினவென எழுந்தது. “நாம் புடவியில் வெல்ல வேண்டியது நம்மைத் தானடி கண்ணே. கனவற்ற பெண் விழைவறிய முடியாதவள். கனவுற்றுத் தனித்து மகிழும் பெண்ணே விழைவை வெல்கிறாள். தானே அறியும் மகிழ்வின் முன் புடவி செயலின்றிப் பணிகிறது” என்றாள் அங்கினி. பதும்மையின் உதடுகள் “ம்ம்” என்றன.

வாசித்தவர்கள் : 366

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,007)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,909)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme