Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கருணையான பைத்தியம்

Posted on December 15, 2024December 15, 2024 by Kiri santh

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவி
அந்தப் பைத்தியம் தனக்குத் தானே
சட்டையைக் கிழித்துக் கொண்டது

ஒரு பைத்தியத்துக்கான
சர்வ லட்சணங்களும் பொருந்தி வர
ஏதாவது ஒன்று குறையும் பொழுது
கருணை அதை நிகர்த்த உதவுகிறது

குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்க
கொடி படரத் தேரைக் கொடுத்து விட்டு
நடந்து செல்ல
மகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாக
வலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்தி
இங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக

நண்பர்களே
கடைசி மோதகத்தில் ஒரு தங்கக் காசெனக் கருணை அளிக்கப்பட்டிருக்கிறது
காத்திருக்கும் எவரோ ஒருவர் அந்த வரிசையில் கடைசியில் நிற்கிறார்

அந்த நாணயத்தின்
புழக்கமில்லாத சந்தையில்
அதை நீட்ட முடியாமல் அவரது கரம் தயங்கித் தயங்கி ஒளிந்து கொள்கிறது
கருணையோடு இருக்கும் பைத்தியத்தின் முன்
ஒரு நாய்க்குட்டியென.

வாசித்தவர்கள் : 443

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme