கன்னி அம்மன்

கன்னி அம்மன்

தூக்கணாங் குருவிக் கூடுகள்
நுனிகளில் தொங்கும் முதிய மரம்

‘நேற்று
நான் வருவேன் என்று
நினைத்தாயா’என்றேன்

மஞ்சளாய் வெடித்தது சூரியன்
வாய்க்காலின் வெள்ளம் உடலேறியது

குழந்தைக்குள் சிரிக்கிறாய்

வயல் நெல் நிரப்பிற்று

மீண்டும்
நெடுங்காலத்திற்குப் பிறகு
தனது கருவறையில் அமர்ந்திருக்கும்
கன்னி அம்மனைப் போல்
வீற்றிருக்கிறாய்

நெடும் பள்ளத்தில் வீழும்
பேரருவியாய்
திரும்பிச் சொல்கிறாய்
சில வரிகளை

பின்
பாதைகள் எங்கும் செல்லக் காத்திருக்கின்றன

கருவறை இருட்டு
மூக்குத்தி வெளிச்சம்.

(2016)

TAGS
Share This