Category: Blog

Your blog category

ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!

Kiri santh- January 1, 2026

சென்னையில் 08.01.2026 தொடக்கம் 21.01.2026 வரை இடம்பெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி. ஓர் இலக்கியச் சூழலின் மையவிசை தொடர்ந்து உரசலில் ... Read More

திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

Kiri santh- December 4, 2025

எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ... Read More

ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்

Kiri santh- December 4, 2025

மாவீரர் நாளின் முன்னும் பின்னும் சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பாடல்களைக் கேட்பது என் பல வருடச் சடங்குகளில் ஒன்று. புலிகளின் பாடல்களுக்கு ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் நுட்பமிருக்கிறது. அந்தப் பாடல்களின் வரிகளும் குரலும் ... Read More

தும்பி : 87

Kiri santh- November 18, 2025

தும்பி சிறார் இதழின் 87வது பிரதி அச்சில் மலர்ந்து இன்று கைவந்து சேர்ந்திருக்கிறது. சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருக்கு உள்ளுமிருக்கும் குழந்தைமையை பாதுகாக்க உதவும் ஒப்பற்ற படைப்புகள். அவ்வகையில் இவ்விதழ் ... Read More

இல் / மீள் / எல்லையாக்கம் : திறப்பு

Kiri santh- November 18, 2025

ஒளிப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய ஒளிப்படக் காட்சி 'இல்/ மீள்/ எல்லையாக்கம்' மானுடம் சர்வதேச கருத்தரங்கில் இன்று காலை பத்து மணிக்கு துவங்கி வைக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் கைலாசபதி அரங்கிற்கு அருகில் இருக்கும் ... Read More

சிறிதினும் சிறிது : திறப்பு

Kiri santh- November 15, 2025

பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சி நேற்று (14. 10. 2025) மாலை அவரது தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது. ஒளிப்படக் காட்சி இன்றும் நாளையும் (15, 16) காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 ... Read More

தன்னறம் இலக்கிய விருது : 2025

Kiri santh- November 12, 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு ... Read More

சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

Kiri santh- November 5, 2025

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் ... Read More

அஞ்சலி : நன்மிளிர்

Kiri santh- October 23, 2025

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய ... Read More

ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

Kiri santh- September 27, 2025

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் ... Read More