Category: Blog
Your blog category
அந்த ஆறு நிமிடங்கள்
தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ... Read More
தினசரி வாழ்வின் கவித்துவம்
தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. ... Read More
இளம் எழுத்தாளர்களுக்கு
ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் ... Read More
அகவிழி : ஆவணப்படம்
அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ... Read More
வையம் : இதழ்
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வையம் இலக்கிய மாத இதழில் அவயமிழந்தவர்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு ஒன்று இம்மாத இதழில் வெளியாகியிருக்கிறது. எனது 'தொடுகை' என்ற கவிதை இதழின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சேரன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகியோரது ... Read More
கீதை : பேருரை
கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ... Read More
புத்தகம் வாங்க..
எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள குயின்சி புத்தகசாலையில் வாசகர்கள், நண்பர்கள் பெற்றுக் கொள்ளலாம். பிரதி ஒன்றின் விலை 1000 rs. Read More
அனார் : சில குறிப்புகள்
உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு! அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் ... Read More
ஷோபா சக்தி : உரையாடல்
தன்னறம் விருதுகளின் போது விருது பெறுபவர்களின் நேர்காணல் வெளியாவதுண்டு. அவை அந்த எழுத்தாளுமையின் குரலில் அவரது வாழ்வைக் குறுக்கும் நெடுக்குமாய் விபரிப்பது போன்றவை. இவ்வருடம் விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர், நடிகர் ஷோபா சக்தியுடன் ... Read More
குறுந்தொகை : ஜெயமோகன் உரை
ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் ... Read More