47: மாகதா : 02

Kiri santh- June 30, 2024

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் ... Read More

46: மாகதா

Kiri santh- June 29, 2024

"உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே" என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் ... Read More

45: சிம்ம நிழல்

Kiri santh- June 28, 2024

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் ... Read More

வாழ்க்கைக்குத் திரும்புதல்

Kiri santh- June 27, 2024

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள ... Read More

44: ஓயா மழை : 02

Kiri santh- June 27, 2024

"மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில ... Read More

43: ஓயா மழை

Kiri santh- June 26, 2024

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று ... Read More

42: இருட் குழவிகள் : 02

Kiri santh- June 25, 2024

"மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் ... Read More

41: இருட் குழவிகள்

Kiri santh- June 24, 2024

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே ... Read More

40: ஆடுகாய்கள்

Kiri santh- June 23, 2024

ஆட்டம் முடிந்ததும் லீலியா செலினியைக் கவனிப்பற்கென தானகியுடன் சென்றாள். நிலவை எழுந்து நின்று சதுரங்கப் பலகையை நோக்கினாள். இரு அரசிகள் கட்டத்தின் நடுவிலே வீற்றிருந்தார்கள். சுற்றிலும் ஆடுகாய்கள். நீலனுடன் சதுரங்கம் விளையாடுவது நிலவைக்கு சொல்லாடும் ... Read More

39: ஆட்டம்

Kiri santh- June 22, 2024

நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். "நீலா" "நீலா" என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய ... Read More