Tag: கவிதை

திரிச்சுடர்

Kiri santh- March 3, 2024

யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024) Read More

சிறு நாவுகளின் தொடுகை

Kiri santh- March 3, 2024

கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் ... Read More

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

Kiri santh- March 2, 2024

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் ... Read More

காலச்சுவடு: கவிதைகள்

Kiri santh- March 1, 2024

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ... Read More

திராவகத்தின் மொழி

Kiri santh- March 1, 2024

ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் ... Read More

ஆதித் தூசு

Kiri santh- February 28, 2024

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ... Read More

நறுங்காற்றின் இசை

Kiri santh- February 28, 2024

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், ... Read More

மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

Kiri santh- February 27, 2024

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை ... Read More

தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்

Kiri santh- February 25, 2024

தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், ... Read More

நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

Kiri santh- February 24, 2024

நானொரு துயரம் நானொரு வாழ்வு பழமையிலும் பழமையானது துயரம். நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்நானே வாழ்வின் பலியும் இரக்கமும். வற்றா அனல் வெளியில் பெருமெளனம்என் இருப்பு. அலறிச் சிறைபடும் ... Read More