Tag: ஆளுமை
கனவுகளின் தெய்வம்
எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? ... Read More
உடுக்கொலியும் பறையும்
விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ... Read More
சிறு நாவுகளின் தொடுகை
கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் ... Read More
உருக்கும் நெருப்பின் கண்ணீர்
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் ... Read More
ஆசிரியரின் சொற் கேட்டல்
ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்? எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். ... Read More
திராவகத்தின் மொழி
ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் ... Read More
ஆதித் தூசு
போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ... Read More
நறுங்காற்றின் இசை
ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், ... Read More
மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்
யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை ... Read More
வெற்றிடத்தால் எழும் வீடு
ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ... Read More