Category: அபிப்பிராயங்கள்
நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?
இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் ... Read More
ஒரு பஞ்சுத் துக்கம்
கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. ... Read More
கவிதை தெய்வமன்றோ
தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. தமிழில் தெய்வங்களை அழைக்கும் ... Read More
அழிகளம்: புனைவு விடுமுறை
சொற்களின் எல்லையை எதுவரைக்கும் உள்ளம் விரித்துச் செல்கிறது என்பதை அறிய ஒரு புனைவை எழுதிப்பார்க்க எண்ணினேன். நான் பொதுவாகவே நீண்ட புனைவுகளை எழுதுவதற்கு எதிரான மனப்பயிற்சி உள்ளவன். ஒரு வகைப் புனைவெழுத்து எதிர்ப்பாளன் என்று ... Read More
யாரோ யாருக்கோ
வாழ்க்கை தற்செயல்களின் புதிர்விளையாட்டு. எங்கோ சிந்தும் எதுவோ இங்கே இன்னொன்றாய் ஆகுவது. யார் கையோ தீண்டும் இசை யாருக்கோ மந்திரமென ஆகலாம். எவர் எப்பொழுதோ கொடுத்த முத்தம் இன்று இப்பொழுதை சொஸ்தப்படுத்தலாம். தற்செயல்கள் நோயளிக்குமளவுக்கு ... Read More
வையத்தைப் பாலித்திட
பாணர்கள், புலவர்கள், கவிஞர்கள் காலாதிகாலமாகத் தம் பொருளாதார வறுமையையும் புரவலரை அண்டி வாழும் நிலையையும் பாடியிருக்கிறார்கள். நவீன கவிஞர்கள் ஒடிந்த தேகத்துடன் ஊர் சுற்றி உழன்றதையும் உழல்வதையும் இந்தச் சமூகம் பார்த்து உள்ளூர மகிழ்ந்தபடிதான் ... Read More
சிறிய கடவுள்
தினசரி என்பது நூற்றுக்கணக்கான சிறு கணங்களால் ஆனது. பெரியதுகள் நிகழும் வாழ்க்கைகள் உண்டு. வாழ்வின் தீவிரம் மிகுபவை அவை. அவற்றுக்கான விழைவுகள் அடைவுகள் உச்சங்கள் தனியானவை. சிறியவைகள் நிகழும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள் மண்ணிலுண்டு. அவையே ... Read More
அற்பன்; எச்சில்; பிணம்
அழியாது உலையும் வேட்கையின் வெப்பக் கரங்கள் உட்தலையைக் கிளறியபடியிருக்கிறது. இன்னதென்றில்லாத ஒன்று இவ்வாழ்க்கையை வாள் வீச்சுகள் போல வெட்டிக் கொண்டே செல்கின்றது. காதலோ காமமோ அதன் தலைகீழ் உச்சத்தில் இரக்கமற்றது. எந்த நிபந்தனையுமற்ற வாழ்க்கைக்கு ... Read More
தற்பிறப்பு
சிறுவயதில் வீட்டில் ஏதாவது குழப்படிகள் செய்துவிட்டால் அப்பா அடிப்பார். விதிமுறைகள் கொண்ட நியாயமான அடிகள் விழும். நான் அடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓடுவதுண்டு, வீடு போதவில்லையென்றால் பக்கத்து வீடுகளுக்கும் சென்று ஓடுவதுண்டு. எங்களது ... Read More