Tag: புனைவு
113: ஒருகணம் : 02
அக்கணத்தில் விழி திறந்திட்ட உருக்கு வாள் முனை போன்ற விழிகளால் சுழல் விழி இளம் பாணனை எண்ணிக் கொண்டாள். அவனது இளம் புரவிக் குழலும் சிறுவனின் அகங்காரம் கொண்ட விழிமணிகளும் அகன்ற மார்புகளில் தேக்கின் ... Read More
112: ஒருகணம்
விண்ணென்பது இளங் கருமையின் மாபெரும் வதனமெனத் திரண்டிருந்தது. சாம்பலின் கருமை தலைப்பட்டினத்தின் மீது அகண்ட காளான்களின் மலைக் குவைகளெனக் கவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இளமழையின் தூவல்கள் வெளிநோக்கி நிலைத்திருக்கும் இளங் காதலியின் விழிமயக்கென எண்ண ... Read More
111: மெய்த்தோழன் : 02
வலைக்குள் வலையென நுண்ணியும் விரிந்தும் அகன்றும் உருவாகிய புலிகளின் குழு முற்றொருமை கொண்டு பிற குழுக்களைத் தாக்கி அழித்து அரசாணை கொண்டெழுந்த போது அரசு சூழ்தலின் தலைமைப் பொறுப்பினை தமிழ்ச்செல்வனிடமே காலம் கையளித்தது. சூர்ப்பனகர் ... Read More
110: மெய்த்தோழன்
அரண்மனை வாயில் கோபுரத்தில் நின்ற இளம் புலிவீரர்கள் இளமழைக்கு ஒடுங்கி கோபுர அறைகளில் ஒதுங்கியிருந்தனர். மூங்கில் ஏணியால் மேலேறிய தமிழ்ச் செல்வனைக் கண்ட போது பதைபதைத்து தம் இடங்களுக்கு மீண்டு கொண்டிருக்க கையால் சைகை ... Read More
109: அன்னைக்கடல் : 02
ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை ... Read More
108: அன்னைக்கடல்
மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா ... Read More
107: இளமழை விளையாட்டு : 02
சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் ... Read More
106: இளமழை விளையாட்டு
நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ... Read More
105: மடப்பெண்ணே : 03
"தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து ... Read More
104: மடப்பெண்ணே : 02
பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் ... Read More

