Tag: புனைவு

73: அணியறை

Kiri santh- July 26, 2024

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி ... Read More

72: மலைமேல் பனி : 02

Kiri santh- July 25, 2024

"நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் ... Read More

71: மலைமேல் பனி

Kiri santh- July 24, 2024

ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் ... Read More

70: நிலவறை

Kiri santh- July 23, 2024

மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன ... Read More

69: எட்டுத்திக்கும்

Kiri santh- July 22, 2024

நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் ... Read More

68: மங்காத கருமை

Kiri santh- July 21, 2024

"மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ... Read More

67: அம்பலம்

Kiri santh- July 20, 2024

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். ... Read More

66: பொற்தேர்

Kiri santh- July 19, 2024

"ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய ... Read More

65: பரிச்சடங்கு

Kiri santh- July 18, 2024

அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென ... Read More

64: நினைவாலயம் : 02

Kiri santh- July 17, 2024

இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ... Read More