Tag: கவிதை
அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு
நீதிக்கான மொழியைக் கவிதை பலவகைகளில் பயின்று வருகிறது. அறத்தை வகுத்துரைத்தல், அது கவனம் கொள்ள வேண்டிய எல்லைகளை மறுவிரிவு செய்தல், அதனுள் அதுவரை ஒலிக்காத தன்னிலைகளின் குரல்களைப் பாடவைத்தல் என்று அதன் பயில்வுகள் பல. ... Read More
மெய்த்துயர்
வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் ... Read More
பக்கத்துக்கட்டிலின் அன்பு
கவியுலகை ஒரு வைத்தியசாலை எனக்கொண்டால் அதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள். சிலர் இதயத்திற்கானவர்கள், சிலர் மனதிற்கானவர்கள், சிலர் பெண்களுக்கான விசேட நிபுணர்கள்… இப்படி வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதில் நிபுணத்துவம் உண்டு. ... Read More
பனித்திணைப் பாணன்
ஒரு நிலம் மனதிலூன்றியவர்கள் நிலம்கடக்கும் போது பெயர்ந்த இன்னொரு நிலம் மொழியில் முளைக்கும். தமிழின் ஆறாம் திணையாய் பனியும் பனிசார்ந்த நிலங்களும் புலப்பெயர்வின் பின் விரிவாக மொழிக்குள் ஊன்றப்படுகிறது. புகைக்கூண்டுக்குள் தணற்கட்டைகளென அகநிலம் உள்ளெரிய ... Read More
முதுமரபின் பெரும்பாணன்
மரபும் நவீனமும் சேரும் கழிமுகத்தின் நீர்ச்சுழியில் பண்ணெடுத்து மீட்டிய முதுமரபின் பெரும்பாணன் சு. வில்வரத்தினம். தமிழின் பழஞ்சுரங்கத்திலிருந்து மொழி ஆபரணங்களை நவீன வாழ்வின் ஆன்மீகமென அணிவித்தவர். மரபான ஆன்மீகமும் அதிலிருந்து உதிரும் உள்வெளி மீதான ... Read More
வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்
சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு ... Read More
தாயும் தோழியும்
ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் ... Read More
எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்
மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் ... Read More
நனைந்து கொண்டிருக்கும் மழை
தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் ... Read More
மகா சாவதானம்
மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் ... Read More