Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

என் தந்தையின் வீடு

Posted on December 10, 2023February 23, 2024 by Kiri santh

வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்
காத்திருக்கின்றன.
என் தந்தையிடமிருந்து எனக்கு
என்னிடமிருந்து இன்னொருமுறை
என் மகனுக்கு.

மகனே,
உன் தந்தையின் வீட்டை  நீ அறிவாயா?

உன்  பட்டினங்களின் பாதைகளை,
கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாத
நந்திக் கடலிடம் கேள்
உலோக மழை கொட்டிய இரவில்
அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன்.

ஆனால் இப்போது
உன் பட்டினங்களிடம் திரும்பு

வீட்டைச் சுற்றி அலையும்
குருவிகளிடம் கேள்
கூடென்பது
இடமா? இருப்பா?

சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்
துடிக்கும் உன் வீடு.

எனவே,
உன் தந்தையின் வீடு இப்போது
ஒரு நினைவாலயம்
அது சந்தையாகும் வரை காத்திருக்காதே
சீக்கிரம் அடைந்து விடு.

வீடென்பது
கிடைப்பதா ? பெறுவதா ?

என் மகனே,
வீடென்பது பேறு.

(2013)

PC : Unknown

வாசித்தவர்கள் : 372

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,145)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,987)
  • காதலின் முன் பருவம் (1,961)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,893)
  • விடுதலையில் கவிதை (1,871)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme