அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென வீசக் கூடியவை. அவரின் கவிதைகளில் ஒன்று, “உன்னைத் திருமணம்…
ரத்த சிம்பனி
சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் பதிலாக புதிதாக ஒன்றை வைக்கும் பொழுது உருவாகி வரும்…
அமைப்பு, செயல், நெறிகள்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து…
கூட்டத்துடன் தனித்திருத்தல்
ஜெயமோகனின் இந்த உரை இன்றைய கால மனிதருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிய கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டது. ஒரு எழுத்தாளராக கூட்டத்தையும் தனித்திருத்தலையும் பயின்று வருவது என்னளவில் மிக அடிப்படையான வாழ்முறையாக மாறி வருகிறது. இந்த உரையின் சிந்தனைகளை ஒருவர் தன் சிந்தனையுடன்…
ஒஷோ : ஓர் உரை
ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு நாம் சிந்தனையில் உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய…
பேய்க் கதை
ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது. பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள பகுத்தறிவுடன் அன்றி இலக்கியம் என்னும் கனவுடன் அணுகும் வாய்ப்பை…
எங்கோ ஒரு கிளி
வியாசர் பற்றிய ஜெயமோகனின் இந்த உரை பண்பாட்டில் நீடிக்கும் காவியத்தின் தன்மை பற்றிய அக மற்றும் புறச்சித்திரத்தை கொடுப்பது. ஒரு கதையும் கதையாசிரியரும் தொன்மமாகி மிளிரும் காலத்திலிருந்து அதைச் சிந்திப்பது.
கவிதைகள். In
கவிதைகளுக்கான இணைய மாத இதழாக வெளிவரும் கவிதைகள்.in இன் ஜனவரிக்கான இதழ் வெளிவந்திருக்கிறது. மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியர்கள்.
வரலாற்றை நேர்மையாகக் கற்பது
ஜெயமோகனின் இந்தக் காணொலி ஒருவர் எதற்காக வரலாற்றைக் கற்க வேண்டுமெனச் சுருக்கமாக வரையறுக்கிறது. வரலாற்றின் பருமட்டான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் எதிர்காலத்தை நோக்கி எள்ளளவேனும் சிந்தனை செய்யும் அடிப்படைத் தகுதியின்மை கொள்கிறார். குறைந்த பட்சம் தன் காலத்திலேனும் அவரால் வாழ முடியாது. பிறப்பும்…
குட்டி இளவரசன்
குட்டி இளவரசனை வாசிப்பதென்பது நவீன இலக்கிய வாசகர்களுக்கான பால பாடங்களில் ஒன்றாகவே ஆகியிருக்கிறது. அந்துவான் து செந்த் எக்சுபெரியின் இந்த நூல் அதனளவில் விதை போன்றது. பல்லாயிரம் காடுகள் உறங்கும் ஒற்றை விதை. எஸ் ராமகிருஷ்ணனின் உரையின் பல சாளரங்களின் வழி படரும் இளங்…