Author: Kiri santh

96: தணல் மலர் : 02

Kiri santh- August 18, 2024

"என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா" என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். "கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ ... Read More

95: தணல் மலர்

Kiri santh- August 17, 2024

விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை ... Read More

94: பாற்கடலிகள்

Kiri santh- August 16, 2024

முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. ... Read More

93: குருதி வேலன்

Kiri santh- August 15, 2024

முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை ... Read More

92: மணநாள்

Kiri santh- August 14, 2024

பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே "என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று ... Read More

91: குழவி நாகங்கள்

Kiri santh- August 13, 2024

உசை "நீலா நீலா" என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். ... Read More

90: சுவடிகை

Kiri santh- August 12, 2024

கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் ... Read More

89: களியிலாடு மயில்

Kiri santh- August 11, 2024

அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் ... Read More

88: இச்சை அகம் : 02

Kiri santh- August 10, 2024

ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு "சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் ... Read More

87: இச்சை அகம்

Kiri santh- August 9, 2024

காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் ... Read More