16: ஈச்சி எழல்

Kiri santh- May 31, 2024

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். ... Read More

15: நிலவை எழல்

Kiri santh- May 30, 2024

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை "நீலா. நீலா" என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் ... Read More

14: இருதி எழல்

Kiri santh- May 29, 2024

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை ... Read More

13: விருபம் எழல்

Kiri santh- May 28, 2024

பதும்மையும் இளம் பாணனும் காட்டின் ஒற்றை வழிக்குள் நுழைந்த பொழுது குருகெனக் காலசைத்து அவர்களை நோக்கி நாணிய பின் மனையின் பின் தூணில் சாய்ந்து நின்றாள் விருபாசிகை. மனையினுள்ளே வேறுகாடாரும் அங்கினியும் இன்னும் சில ... Read More

12: சுழல் எழல்

Kiri santh- May 27, 2024

ஆடற் சித்தரின் சொற்கள் சுழல் விழிக்குள் கலங்கிக் கலங்கி மண்கலயத்தில் நாணயங்களின் புரள்வென உருண்டன. வெளியே பகலின் வெளிச்சம் பதுங்கிக் பின்னால் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் சித்தரின் சொற்கள் உருண்டு உருண்டு ... Read More

11: உருகம் எழல்

Kiri santh- May 26, 2024

பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து ... Read More

10: மயக்கு விளி

Kiri santh- May 25, 2024

"போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே" என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் ... Read More

09: படையல் விளி

Kiri santh- May 24, 2024

"மூநாள் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. ஒரு லட்சம் குடிகளுக்காவது உணவிட வேண்டும் மச்சாள். நீ அரியும் வெங்காயங்களை வைத்து ஒரு குழந்தைக்கு கூட உணவு கொடுக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு வெற்றிலை வாயைத் துப்பிவிட்டு ... Read More

08: பலி விளி

Kiri santh- May 24, 2024

மாலை கரைசேரும் யவன மரக்கலனில் தனக்கான வலிநீக்கு ஒளடதங்கள் வந்து சேரும் எனப் பேராவலுடன் காத்திருந்தான் தமிழ்க்குடியின் முதற் பரதவ அரசன் நீலழகன். போரில் அங்கங்களை வெட்டி வீழ்த்தும் போதும் ஆயிரமாயிரம் அம்புகள் பெருமழைப் ... Read More

07: சித்த விளி

Kiri santh- May 23, 2024

ஆடற் சித்தனின் சாம்பல் ஊறிய மேனியில் நெளிகாற்றொன்று மோதி கடுங்குழலைக் கலைக்க முடியாமல் அஞ்சி விலகி இன்னொன்றாக உருமாறிச் சென்று மறைந்தது. பல பருவங்களாக ஆறுகளிலும் குளங்களிலும் ஆழியிலும் குளித்துத் துணியால் உலர்த்தாமல் வெய்யிலில் ... Read More