Tag: புனைவு

103: மடப்பெண்ணே

Kiri santh- August 25, 2024

பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் ... Read More

102: இளமழைத் தூவல்

Kiri santh- August 24, 2024

சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் ... Read More

101: அரக்கனின் காதல்

Kiri santh- August 23, 2024

சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி ... Read More

100: எதிராட்டக்காரி : 02

Kiri santh- August 22, 2024

இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை ... Read More

99: எதிராட்டக்காரி

Kiri santh- August 21, 2024

சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். ... Read More

98: ஊர்தி : 02

Kiri santh- August 20, 2024

வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். "வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா" என்றார். "நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை ... Read More

97: ஊர்தி

Kiri santh- August 19, 2024

"எனது காமம் உடலில் நிகழ்வதில்லை பொன்னா. உடலை ஊர்தியாக்கிக் கற்பனையிலேயே என்னைக் கண்டு கொள்கிறேன். நான் முற்று விழையும் ஆணென்று ஒருவரைப் புடவியால் ஆக்கியளிக்க ஒண்ணாது. நான் என்ற இருப்பிலிருந்து மேனி கடந்து எழும் ... Read More

96: தணல் மலர் : 02

Kiri santh- August 18, 2024

"என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா" என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். "கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ ... Read More

95: தணல் மலர்

Kiri santh- August 17, 2024

விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை ... Read More

94: பாற்கடலிகள்

Kiri santh- August 16, 2024

முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. ... Read More