Tag: புனைவு

23: வெறியாட்டன் உரைத்தது

Kiri santh- June 6, 2024

ஆடுக ஆடுக பேய்க்களியொன்றைதேடுக தேடுக வெம்மார்பொன்றைதீயினில் கருக செந்நாவென்றைவேலினில் கூரிய கருநாவொன்றைஆடுக ஆடுக வெறியாட்டொன்றைதேடுக தேடுக குறுவாளென்றைகுருதியில் மலரச் செம்பூவொன்றைகுருதியில் மலரக் கரும்பூவொன்றை. வெறியாட்டன் சூர்விற்பன் வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை ... Read More

22: தூமழை உரைத்தது

Kiri santh- June 5, 2024

செருக்களமேவிய புரவியே நீயுரைமாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோமின்னவன் விழிகள் உற்றனையோகூவிடும் புலிக்குரல் கேட்டனையோதேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோஇன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோஅழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் ... Read More

21: சங்கு உரைத்தது

Kiri santh- June 4, 2024

ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரைஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்தூமிகு வெண்சங்கே நீயுரைஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலிஏற்றிய நுண்சங்கே நீயுரைகூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை ... Read More

20: முத்து எழல்

Kiri santh- June 3, 2024

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது ... Read More

19: லீலி எழல்

Kiri santh- June 3, 2024

விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு ... Read More

18: உசை எழல்

Kiri santh- June 2, 2024

முதற் சொல்லை உசை கேட்ட போது அது 'நீலா' என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் ... Read More

17: அரூபம் எழல்

Kiri santh- June 1, 2024

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் ... Read More

16: ஈச்சி எழல்

Kiri santh- May 31, 2024

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். ... Read More

15: நிலவை எழல்

Kiri santh- May 30, 2024

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை "நீலா. நீலா" என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் ... Read More

14: இருதி எழல்

Kiri santh- May 29, 2024

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை ... Read More