கம்பாட்டமும் தூவக்காளியும்

ஜெயமோகனின் சிறுகதையான தூவக்காளியை இடைக்கிடை திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஒரு தூவக்காளி ஆட்டக்காரரான அப்பா குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தன் மகன் ஆட்டத்துக்கு செல்ல தயங்கி, விருப்பமின்றி இருக்கும் பொழுது அவனுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அதன் மூலமந்திரத்தையும் கொடுக்கிறார். அவன் நம்பிக்கையின்றி ஒரு வீட்டிற்கு ஆட்டத்திற்குச் செல்கிறான். அங்குள்ள பெண்ணின் முன் புல்பிள்ளயை வைத்து சடங்குகளைச் செய்கிறான். அறியாத ஒரு கணத்தில் அவனுள் எழும் தூவக்காளியை கண்டு …