72: மலைமேல் பனி : 02
“நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் உறையும் நீரென்ற சொல்லிலிருந்து அவர் எழுந்தார். விழிகள் தீக்கங்குளென உறைந்த இளையவர் கூட்டம் அவரை நோக்கியிருக்க முதுபாணர் ஒருவர் இருகரம் தலைகூப்பி ‘அன்னையே’ என விழிநீர் பொங்கி வரக் கூவினார். முது விறலியின் அருகிருந்த …
