கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பான நோவிலும் வாழ்வு குறித்து இணைய இலக்கிய இதழான அகழில் எழுதிய குறிப்பு.
Category: Blog
Your blog category
தன்னறம் இலக்கிய விருது : 2024
மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு…
நீலி : பெருந்தேவி சிறப்பிதழ்
நீலி இதழில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி அவர்கள் பற்றிய சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். பெருந்தேவி தமிழின் முக்கியமான கவிஞர் என்பது என் எண்ணம். அவர் குறித்து சிறப்பிதழ் வெளியாகுவது முக்கியமான பண்பாட்டுச் செயற்பாடு. வாழ்த்துகள் நீலி இதழுக்கு. https://neeli.co.in/category/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2024/
நிகழ்வு நிறுத்தம்
அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம்.
ஒற்றைக்கோடை : விற்பனையில்
கவிஞர் ஆதி பார்த்திபனின் தாயதி வெளியீடான ஒற்றைக்கோடை கவிதைத் தொகுப்பினை தற்போது கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். கிடைக்குமிடங்கள்:
தடங்கல்
எனது இணையத்தளம் சில நாட்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. இந்த நாட்களில் எழுதுவதும் நாளொன்றுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. எழுதியதைத் திரும்பத் திரும்பச் செப்பனிட்டுக் கொண்டிருந்தன விரல்கள். அம்பலம் ஏற முடியாத கூத்தனைப் போல தனித்து நடித்துக் கொண்டு ஆடியில் தன்னுருவைத் தானே…
தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை
ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே…
கருணையின் முன் நீட்டப்படும் கை
தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ஒரு தமிழர் எதற்காகத் தும்பி இதழை வாங்க வேண்டும்?…
ஆகப் பெரிய கனவு
குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள். தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை…
கண்ணீருடன் ஒரு பறத்தல்
தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்… பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் திருவிழா திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப் பெண்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நல்லதிர்வுகள் நிறைந்த நாள் அது. அந்நாளில், நம் நிலத்தின் பலநூறுவகை பாரம்பரிய நெல்வகைகளை…