மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் உறையும் துளைகள், தூசுகள், கிரகப் பாறைகள் என்று அளவிலாத…
Category: ஆக்கங்கள்
மகத்தான மாகளிறு
தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன். மொழியை மிக நீண்ட புனைவுப்பரப்பென ஆக்கி நாவல்களுக்கு நிகரான…
எல்லாமே கவிதை அல்ல அல்லது எல்லாமே கவிதை
தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதுவதற்கான முதற் சொல்லை மனதில் துழாவியபடி இந்த அதிகாலைப் பனியில் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு இளம் பெண் கையில் வீணையைத் தூக்கியபடி நடந்து வந்து அருகில் நின்றார். தற்செயலாய் அவர் விரல்கள் பட்டு அந்த வீணை ஹம் என்று ஒரு…
மூப்பரின் உளி
இதுவரை பிறந்தவர்க்கும் இனிப் பிறக்கவிருப்பவருக்கும் நெஞ்சினுள் ஒரு சின்னஞ்சிறு கருங்கல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது கூடியுருண்ட மாபெரும் கருங்கல் மலையின் சிறு பொடி. அதனை மலையென ஆக்கும் பணி கவிஞர்களுடையது. அக்கூட்டின் இழைவை உளிமுனையால் ஒட்டும் மொழி எவ்வளவு நுட்பமோ அதேயளவு அவ்வளவு துல்லியமான இணைவும்…
ஓதி எறிந்த சொற்கள்
விளிம்பின் அகமொழி மையத்திற்குள் நகர்கையில் அவை ஓதி எறியும் சொற்களெனவும் சூனியத்தின் மாந்திரீக மொழியெனவும் ஆகும். தன்னைக் கேட்பவரை ஆவாகனம் செய்து வசியத்தின் விழிகள் சொருக நிற்க வைக்கும். அம்மொழியின் உள்ளெரியும் கனலால் அடி முடியற்ற சோதியின் நூறுநூறு தீக்கொழுந்துகளை தலையில் சூடியபடி வாழ்வை…
மூக்குத்தியின் அலையும் சுடர்
நவீன தமிழ்க் கவிதையை அடிவயிற்றிலிருந்து இதயம் வரை நகர்த்திய முன்னோடி சுகுமாரன். மொழி ஒரு ராட்சத ஒக்டோபஸ் போலத் தன் அனைத்துக் கரங்களையும் நீரில் துழாவி அசையக்கூடியது. அதன் இருவிழிகளே மொழியின் பிரக்ஞை. அங்கிருந்து தன்னீருலகைப் பார்க்கும் பிரக்ஞையே சுகுமாரனின் மொழியிருப்பு. சுகுமாரன் என்ற…
நும்மார்பிற் பாம்பு
தமிழில் சுடுகாட்டின் நிகருலகையும் பக்தியையும் இணைத்த பெருபேய் காரைக்கால் அம்மையார். சிவன் என்ற கடவுளுருவுடன் உண்டாகும் உறவை, பக்தி நிலைப் பாவமாகக் கொள்ளும் வாசிப்பு பெருமளவு உள்ளது. ஆனால் அதன் புறவுலகைச் சாம்பலைப் போலுதிர்த்து உள்நிற்கும் மனநிலையை விரக்தியுடன் மானுட விலக்கமும் கூடிய பெண்…
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை…
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்
கற்சிற்பங்களாலான ஒரு மாபெரும் அரண்மனை மொழியென்றால் அதன் ஒவ்வொரு நுண்மையும் வாளிப்பும் திரட்சியின் முழுமையும் கவிதையினால் உண்டாகுவது. பூ வேலைப்பாடுகள், ஆண் பெண் உடல்கள், அதீத மிருகங்கள், பறவைகள், கனவுகள் எல்லாமும் மொழியில் கவிதையால் உறைவிக்கப்படுபவை. யுத்தத்துள் ஈழம், தன் நிலத்திலிருந்து நிலமிலி வரை…
கள்ளவிழ் செண்பகப் பூமலர்
தமிழ் மரபின் பக்திச்சுவை பெண்ணுள்ளத்தின் காதலெனவும் காமமெனவும் திரண்டதன் மகத்தான முதற் குரல் ஆண்டாளுடையது. சேராக் காதலின் ஏக்கமும் உடல் விதிர்விதிர்த்துக் காமம் ஒவ்வொரு மயிர்நுனியிலும் பனியூறுவது போல் மலர்வதும் ஆண்டாளின் மொழியில் கவிதைகளென ஆகிறது. கோயில் திருவிழாக்களில் ஏறும் சாமியும் அதைக் காவும்…