அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

சபரிநாதனின் ‘தூஆ’ என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கவிதைகள் மொழியில் நிகழ்வது, நாமே நம்மின் அழகை ஆடியில் பார்க்கும் ஒரு தருணமல்லவா. தூஆ தமிழிற்கு அத்தகையதொரு வரவு. தொகுப்பைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் …

குழந்தை கண்ட மின்னல்

கவிதை மொழியின் கலை. இருட்டில் ஆயிரணக்கான மின்மினிகள் இருளின் கண்களென ஆகி எங்களைப் பார்ப்பது போல் கவிதை வரிகள் அகத்தில் விழித்துக் கொள்வன. அன்றாட வாழ்விலிருந்து மேலெழும் மின்மினிகள் எவ்வளவு உயரம் பறந்திடல் கூடும்? வானமோ பிராகசம் மிக்க விதானம். அதற்கு அப்பாலும் வெளி தான். மானுடரின் எளிய சொற்கள், அவ்விதானத்தையும் அதன் மேற் திறந்துள்ள பிரபஞ்ச வெளிகளையும் அறியும் பொருட்டு, கண்ணை மூடிக் கொண்டு மாபெரும் கலயத்துள் கைதுழாவும் …