73: அணியறை

தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி சிந்திய வண்ணங்கள் ஊறி ஊறி ஒவ்வொரு குவையும் அதிகனவில் தோன்றும் மலர்ச்சோலைகளெனக் களி கொண்டிருந்தன. கரைக்கடலில் மிதந்த சிறுபடகுகளில் ஆடவரும் பெண்டிரும் கள் மயக்கில் அட்டைகள் போல் ஒருவர் மேல் ஒருவர் புரண்டு ஊர்ந்து …

72: மலைமேல் பனி : 02

“நீர்க்குமிழியின் காற்றை வெளியிருக்கும் காற்று வந்து தொட்டுத் திறப்பது எங்கென அறியாமுடியாததைப் போல் முதுவிறலியின் சொற்கள் எனது அகத்திற்குள் நுழைந்தன. அவரின் சொற்கள் காதலின் நீர்மையின் பலவடிவ பேதங்களை உருமாற்றி உருமாற்றி உண்டாக்கின. நெருப்பில் உறையும் நீரென்ற சொல்லிலிருந்து அவர் எழுந்தார். விழிகள் தீக்கங்குளென உறைந்த இளையவர் கூட்டம் அவரை நோக்கியிருக்க முதுபாணர் ஒருவர் இருகரம் தலைகூப்பி ‘அன்னையே’ என விழிநீர் பொங்கி வரக் கூவினார். முது விறலியின் அருகிருந்த …

71: மலைமேல் பனி

ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் உளறிய சொற்கள் அவனை ஈக்களென வந்தறைந்து கொண்டிருந்தன. நிலவையின் அருகே நின்றிருந்த பெய்யினியின் கூந்தல் காற்றில் வளைந்து எழுந்து நூல்களென ஆடியமைந்தன. சிற்பங்களை அவனது விரல்கள் நுணுகும் தோறும் அவன் அகத்தை அவனே குடைகிறான் …

70: நிலவறை

மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன மதுவை உண்டு தலைசுற்றி மயங்கி ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து இருகுற்றிகள் போல் முட்டிக்கொண்டிருந்தனர். மதுச்சாலையைக் கவனிப்பதில் பயனில்லை என்ற நிலை உண்டானது. அவரவர் விரும்பிய வண்ணம் கள்ளிலும் மதுவிலும் குளித்தாடினர். முதுவிறலிகளின் முலைகளில் …

69: எட்டுத்திக்கும்

நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் சுற்றிக்கொண்டிருந்த புறாக்கள் தாம் உன்னை விட்டு விலகுவதில்லை எனச் சொல்வது போல் தடதடவெனச் சிறகொலியெழுப்பின. நிலவை முழுதணி பூண்டிருந்தாள். சிரசில் மாணிக்கம் பதித்த தூங்குமணி நுதற் கண்ணெனத் திறந்திருந்தது. கூந்தலில் மென்நரைகள் மலர்ச்சரங்களில் பின்னப்பட்டு …

68: மங்காத கருமை

“மானுடரில் உறையும் அசுரத்தனத்தை விடுவிப்பதென்பது பெண்ணை விடுவிப்பதாலேயே நிகழும் இளம் பாணனே. பெண்ணின் வேட்கையாலேயே புடவி இல்லமென மானுடருக்கு அமைந்தது. ஆடவர் அனைவரும் அவளின் எளிய பணியாட்கள். தன்னை ஆள்பவரை அஞ்சாத பணியாள் எவர். ஆகவே பெண் குடிநெறிகளால் சிறையிடப்பட்டாள். நெறியே அவளின் முதற் பிடிகாப்பு. அதை என்றைக்கும் நினைவு கொள்ளவே கைவளைகள் அணிவிக்கப்படுகின்றன” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் வேறுகாடார். “நீங்கள் பெண்களில் அடிவேருக்கு அப்பாலும் வெறுப்புக் கொண்டவர் …

67: அம்பலம்

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். லட்சம் பேர் சுற்றியமர்ந்து நோக்கும் வண்ணம் மா அம்பலம் உயர்ந்து நின்றது. பெருந்தச்சரும் மன்றுத் தலைவர்களும் உரையாடிக் கொண்டு நின்றனர். அம்பலத்தை நோக்கியிருந்த சுழல் விழி குளிரும் மலரென அம்பலம் பனங்குற்றி மேல் முளைத்து …

66: பொற்தேர்

“ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய அனைத்துக் கனவுகளும் இப்பொற் தேரைப் போன்றதே. எளிய உளமொன்றிற்கு இத்தனை பெருஞ்செலவு பகட்டெனவும் எதற்கென்றும் தோன்றும். வறுமையிலும் இன்மையிலும் உள்ளவர்க்குப் பகிர்ந்தளிக்கலாம் எனச் சொல்லும் நாவுகளும் உண்டு. ஆனால் மகத்தானவை எளிய உள்ளங்களுக்கானவை அல்ல. …

65: பரிச்சடங்கு

அரண்மனையின் புரவிக் கொட்டிலில் கனைப்புகளின் ஒலிகள் ஆரவாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான காவல் வீரர்கள் நுணுகி நுணுகி நோக்கிப் புரவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். சூரியனின் செம்பொன் ஒளி புரவிக்கொட்டிலின் இடைகளின் ஊடாக வெள்ளப் பீறெலென வழிந்து கொண்டிருந்து. இருநாழிகையில் பரிச்சடங்கிற்கான பணிகளை ஒருக்கி முடித்தாக வேண்டும் என எண்ணிக் கொண்ட இடவர் ஏழு தேர்ந்த அரச புரவிகளை அவர் கைப்பட அலங்கரித்துக் கொண்டிருந்தார். நான்கு கரும்புரவிகளும் மூன்று வெண்புரவிகளும் அவர் …

64: நினைவாலயம் : 02

இடையிலிருந்த விண்யாழியை நீள்மரப்பெட்டியில் அமர்ந்திருந்த ஆடற் சித்தரின் முன் ஆற்றில் உள்ளங்கை நீரை ஊற்றுபவள் போல இறக்கி விட்டாள் தூமழை. விண்யாழியின் வாயில் நுரை கசிந்து கைவிரல்களில் எச்சில் வடிந்திருந்தது. மூக்குநீர் ஊறி வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிக்குப் படிந்தது போல் புழுதி விண்யாழியின் கேசத்தில் அப்பியிருந்தது. அவள் ஆடற் சித்தரை நோக்கினாள். அவளது மழலை விழிகளின் செம்மையைக் கண்டவரது அகம் வீங்கி வீங்கி அடங்குவது அப்பேருடலில் மூச்சென வெளிப்பட்டது. அவரது …