அரசின் விருதுகள் – எதிர்வினை

நேற்று நான் எழுதிய அரசின் விருதுகள் குறிப்புத் தொடர்பில் காலையிலேயே ஓரிரு வசைகளுடன் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. முழுவியலம் அமங்கலமாக இருப்பது ஒருவகையில் நேற்றின் தொடர்ச்சி தான். ஆற்றப்படும் அனைத்து செயல்களுக்கும் வினைகளுக்கும் எப்படியோ எப்பொழுதோ எதிர்விசைகள், பழிநிகர்கள் நிகழ்வது இயற்கையே. ஆனால் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் நான் அந்தக் குறிப்பை சோ. பத்மநாதனை அவமதிப்பதற்காக எழுதியதாகக் கருதியே கடுமையாக ஏசியிருக்கிறார். அவருக்கு யாரோ வட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அரச இலக்கிய …

அரசின் விருதுகள்

அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் பெறுவதைப் பற்றி நண்பரொருவர் வேடிக்கையாகச் சொன்னார். அவர் முதன்மையான சிக்கலாகச் சொன்னது “இவங்களே அனுப்பி, அத ஒரு குழு தெரிவு செய்து, வாங்குவாங்களா எண்டு உறுதிப்படுத்தி, பிறகு அறிவிப்பு வெளியாகும் இந்த விருதுகள் தேவையா? எழுத்தாளரெண்டால் ஒரு இது இருக்க வேண்டாமா?” என்ற சாரப்படச் சொன்னார். அரச இலக்கிய விருதுகளுக்கும் வாசகர் வட்டங்களினதோ பண்பாட்டு அமைப்புகளினதோ விருதுகளுக்கும் உள்ள இடைவெளியை வெட்டிப் பிரிப்பது முக்கியமானது. …

களத்திற்கு வருக!

எழுத்தாளர் கருணாகரன் புதியதாக இணையத்தளம் உருவாக்கியிருக்கிறார். அதில் அவர் தொடர்ந்து எழுதுவது பல வகையில் முக்கியமானது. முதன்மையாக முகநூல் சில்லறை விவாதங்களுக்கு வெளியே இணையத்தளங்களில் விவாதிப்பது இலக்கியத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொள்ளும் வாசகர்களை உருவாக்கும். என் தளம் ஆரம்பித்து மூன்று வருடங்களில் அதை நன்றாகவே உணர முடிகிறது. முகநூல் ஒரு அரட்டை வெளி. அங்கு தீவிர இலக்கியத்தை விவாதிப்பது போன்ற நேரவிரயம் பிறிதில்லை. தேநீர்க் கடைச் சாக்குப் போல …

யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா : 2026

நல்லூர்த் திருவிழாவினை ஒட்டி நிகழும் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா செப்டெம்பர் 5 – 9 வரை நல்லூரின் அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ளோர் பயன் பெறுக. 

மொழிநடை, செல்வாக்கு – ஜெயமோகன்

‘பித்தம் தெளிய வைத்தல்’ எனும் என் எதிர்வினையில் மொழிநடையில் மூத்த தலைமுறையினரின் செல்வாக்கு பற்றிய என் பார்வைகளை தொகுத்து எழுதியிருந்தேன்.  மொழிநடை மீதான செல்வாக்கு குறித்து ஜெயமோகன் தன் தளத்தில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகளின் இணைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன். “….இது மிகச் சிக்கலான, மிக மிக நுணுக்கமான ஒரு செயல்பாடு. பல்லாயிரம் கிலோ எடையைத் தூக்குவது போலவோ, மெல்லிய பனித்துளி ஒன்றை சுட்டுவிரல் நகத்தின் மேல் எடுத்துக்கொண்டு வருவது போலவோ, …

யாத்திரை : சிறுகதை

‘யாத்திரை’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா செப்டம்பர் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா செப்டம்பர்

ஒரு தெய்வத்தை எழுப்புதல் : முன்னுரை

நான் ஒரு கவிஞன் என்ற ஆணவம் அளிக்கும் நிமிர்விலும் செளகரியத்திலும் நெடுங்காலம் ஆழ்ந்திருந்தேன். என் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளிவந்த பின்னர் அது மெல்ல மெல்ல மாறியது. தொகுத்து அளிக்கப்படும் பொழுது சுருங்கிக் கட்டியாகி சிறிய கூழாங்கல் போலாகியது. கவிதையின் உச்ச கணங்கள் அளிக்கும் நிறைவுணர்வு சட்டென்று அகன்று விடுவது. மிச்ச நேரமென்பது மூளையின் நெசவுத்தறிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாய கொந்தளிப்புடன் இருப்பது என்பதாகி விட்டது. கவிதையைப் …

தத்வமசி : முற்பதிவு

“17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும் மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற் போல் உணர்ந்து மனை துறக்கிறான் ஒருவன்.  அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக் காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’. கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும் தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன் நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் …

மாலு பாண் விற்பவர்

||பிழைப்புவாதத்திற்கும் விருது ரியாஸ் குரானா படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில், ஆளும் வர்க்கத்தின் ஏவலாட்களாகச் செயல்படும் அறிவுத்துறைத் துரோகத்தின் ஆகச்சிறந்த அடையாளம் கவிஞர் கருணாகரன். இது வெறும் பிழைப்புவாதத்தைக் கடந்த ஒரு கருத்தியல் வக்கிரம். தனது துரோகங்களையும் அரசியல் சமரசங்களையும் தந்திரமாக மூடிமறைக்க அவர் அரங்கேற்றும் நாடகங்கள் எந்தவொரு முதலாளித்துவத் தந்திரசாலியையும் மிஞ்சக் …

சிலந்தி வலையில் ஒரு பனித்துளி

  “எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன்   தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்வருடத்திற்கான இயல்விருது ஓவியர் ட்ரோஸ்கி மருதுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணாகரனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2026 இற்கான கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய …