108: அன்னைக்கடல்
மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா வும் ஒரு மழலையின் அழைப்பு என செவிகளில் குளிர் விரல்களால் தொட்டளைய உதிருடல் போலிருந்த முதிர்தேகம் மெய்ப்புக்கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இளவயது முதலே நீலக்கடலை புலரியில் நோக்கியிருப்பது அவளின் வழக்கம். “அலை …
