88: இச்சை அகம் : 02

ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு “சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் என எங்கனம் உய்த்தறிய ஒண்ணும். மானுட அகம் உறவுகளை மேடையொன்றாக்கித் தீராது நடிக்கிறது. மெய்யென்று நாம் காணும் ஒவ்வொன்றிலும் அறியாத பொருள்கள் உறைகின்றன அல்லவா. அவரே அறியாத அவரது ஆழகம் உண்டல்லவா” என்றான். விருபாசிகை …

87: இச்சை அகம்

காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் திவலைகளே. சுழல் எதனால் உண்டாகிறது. ஒழிச்சலில்லாத காட்டுபுரவிகளின் பெரும் ஓட்டத்தில் விசையாய்க் காலத்தை எழுப்புவது எது. எது ஒரு அணுவை நான் உயிரென எண்ணச் செய்தது. அதில் எது பருத்து வடிவங்கள் பூண்டது. எது …

86: அதியா

“இது கலிமுற்றி ஊழிமுதல்வன் எழுங்காலமென எரிவிண்மீன் ஆகாயத்தில் தோன்றிய அன்றே காலக் கணியர்கள் வகுத்துவிட்டனர் அங்கினி. நாம் காணும் அனைத்துக் களியும் ஊழியின் தாண்டவத்திற்கான ஒத்திகையே” என்றார் ஆடற் சித்தர். களியிரவில் அரவொன்று தன்னை உற்றிருப்பதைப் போல் மெய்ப்புக் கொண்ட அங்கினி காட்டு வாயிலில் நுழைவதற்கு முன்னரான வளைவில் பெருந்தேக்கமரத்தின் பின்னால் அழுங்கெனப் பற்றி நின்ற தேகனைக் கண்டாள். அவள் இரு தேகங்களை என்றைக்குமாக நினைவிலும் கனவிலும் சுமப்பவள். ஒருவர் …

85: நஞ்சு மழை

முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை வழித்துக் கொள்பவன் போல நக்கிக் கொண்டான். ஆழிப்புயலிடை சிறுகலத்தில் புரளும் மரப் பீப்பாய்களென உடலை உலைத்துக் கொண்டிருந்தது காய்ச்சல். நினைவுகளும் புரண்டு நுரைத்துச் சீறுவன போல் சித்தத்தைக் குலைத்து ஆடின. மேனியில் ஏறிய கொல் …

84: பெருவூஞ்சல்

மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க நிலையில் அல்லிக் குளத்தின் கரை மேட்டில் பனியில் பனியெனக் கரைந்திருந்தார். அல்லிக் குளத்தின் காற்றலைகளிடை கரைச் சேற்றிற்குத் தலையையும் குளத்திற்கு வாலையும் நீட்டியிருந்த இரு பெருமர வேர்ப்புடைப்புகள் போன்ற முதலைகள் வாயை இழுத்துப் போர்த்துக் …

83: புலரியாட்டம்

“முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ஒரு மணிக்குண்டலம் எவ்விடம் தொலைந்ததென செவித்துளையை உருட்டிக் கொண்டிருந்தான். அவன் முன்னே ஓளித்துண்டுகள் விழும் மூங்கில் சாளரத்தில் சாய்ந்தபடி திரிபதங்கன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். திரிபதங்கனின் மேலாடையற்ற உடல் போர்வேழத்தின் முகபாடமென மின்னிக் கொண்டிருந்தது. அவனது …

82: புலரிப்பனி

புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி அறுபடாது தொடர்ந்து செல்லும் எறும்புகளைப் போல மக்கள் கூட்டம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சதுக்கத்திலிருந்து அம்பலம் செல்லும் வழியை ஒருமுறை நோக்கும் எண்ணம் இளம் பாணனுக்குள் விந்து சீறியடங்கிய பின்னர் குறியை நோக்கும் …

81: வெறுந்தேகம்

சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் அதிர்ந்தன. ஈசனை எழுப்பும் இசையென்றானவையில் எழுந்தாள் சூர்ப்பனகை. சிற்பன் ஒருகணம் விழிமூடித் திறந்து ஆடலின் முதலசைவை ஊழ்கம் கொண்ட போது திருதிகாவின் மலர் முகம் மின்னிப் பூரணையென்று வானில் ஒளிர்ந்தது. விண்ணிலிருந்த ஒளிவட்டத் தண்மதியில் …

80: விழவின் தெய்வம்

“எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே” என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று இருப்பதென்ற மயக்குகளையும் நோக்கிக் கொண்டிருந்தான். “இளம் பாணனே. இங்கிருப்பவை பல்லாயிரமாண்டுகளாக மானுடர் கண்ட நாகங்களின் விழிமணிகள் என்றறிக. ஒவ்வொரு முறை ஒருநாகம் கல்லாலயத்தில் அமைக்கப்படும் தோறும் எங்கோ எவரோ கண்களால் கண்டுற்ற அதன் வெளிச்சம் …

79: மாயச்சிறகுகள்

நீலழகன் பொற்தேரில் குருளையெனப் பாய்ந்து ஏறுவதை நோக்கிய தமிழ்ச்செல்வன் புன்னகை மீண்டான். ஒவ்வொரு முறை நீலன் உடலும் உளமும் சோர்ந்து நோயுறும் போதும் ஓரிழை புன்னகை தமிழ்ச்செல்வனிடமிருந்து உதிருவதை எவரும் அறியார். இரவின் மாயப்போர்வை பட்டினத்தை மூடுவதை தலையுயர்த்தி நோக்கியவன் தீப்பந்தங்களும் வெளிச்சத் தட்டுகளும் இரவின் வண்ணக் கலவைகளை பேரழகில் சுடர்ப்பதை நோக்கியிருந்தான். தன் தேரில் வீரர்கள் உதவியுடன் பிடிகோலை மேலே கொடுத்தவன் காயத்தொட்டிலைத் தூக்குவதைப் போல முன்னின்றும் பின்னின்றும் …