88: இச்சை அகம் : 02
ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு “சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் என எங்கனம் உய்த்தறிய ஒண்ணும். மானுட அகம் உறவுகளை மேடையொன்றாக்கித் தீராது நடிக்கிறது. மெய்யென்று நாம் காணும் ஒவ்வொன்றிலும் அறியாத பொருள்கள் உறைகின்றன அல்லவா. அவரே அறியாத அவரது ஆழகம் உண்டல்லவா” என்றான். விருபாசிகை …
