73: அணியறை
தேர்ச்சில் கழல்வது போல் உருண்டு ஆழியின் மேலே தங்கக் கனியெனத் தனக்குள் தான் உருகிக் கொண்டிருந்தது பரிதி. கடற் பறவைகள் கூட்டமாக ஒலியெழுப்பிக் கொண்டு கரை நண்டுகளைக் கொத்திப் பறந்து கொண்டிருந்தன. மேகங்களில் பரிதி சிந்திய வண்ணங்கள் ஊறி ஊறி ஒவ்வொரு குவையும் அதிகனவில் தோன்றும் மலர்ச்சோலைகளெனக் களி கொண்டிருந்தன. கரைக்கடலில் மிதந்த சிறுபடகுகளில் ஆடவரும் பெண்டிரும் கள் மயக்கில் அட்டைகள் போல் ஒருவர் மேல் ஒருவர் புரண்டு ஊர்ந்து …
