கள்ளவிழ் செண்பகப் பூமலர்

தமிழ் மரபின் பக்திச்சுவை பெண்ணுள்ளத்தின் காதலெனவும் காமமெனவும் திரண்டதன் மகத்தான முதற் குரல் ஆண்டாளுடையது. சேராக் காதலின் ஏக்கமும் உடல் விதிர்விதிர்த்துக் காமம் ஒவ்வொரு மயிர்நுனியிலும் பனியூறுவது போல் மலர்வதும் ஆண்டாளின் மொழியில் கவிதைகளென ஆகிறது. கோயில் திருவிழாக்களில் ஏறும் சாமியும் அதைக் காவும் வாகனமும் போல்வது கவிதை. மொழியே வாகனம். அதிலேறும் சாமியே கலை. ஆண்டாளின் மொழி மார்கழி அதிகாலைகளின் மழைக்குளிரில் காலீரம் உரச, கருங்கற் சிலைகள் சூழத் …