பிணக்கு

தெய்வங்களுடன் கோபித்துக் கொள்வது அம்மாவின் வழக்கம். நேர்த்திகள் வைப்பது, சந்நிதிகளில் புலம்புவது, இறைஞ்சு நிற்பது, கதைத்துக் கொள்வது அம்மாவின் இயல்பு. பெரும்பாலும் பெண் தெய்வங்களுடன் தான் பேச்சு வார்த்தையும் ஒரு உரிமையும் இருக்கும். ஆயிரந் தான் இருந்தாலும் பெண்ணுக்குப் பெண் தானே உதவி! ஆனந்த்குமாரின் பதில் என்ற கவிதையை வாசித்த போது அம்மாவின் பிணக்குக் காலங்களை நினைத்துக் கொண்டேன். அந்தப் பிணைப்பில் உள்ளது ஒருவகையில் தாய் – மகள் உறவு. …

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார். இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல. வாழ்வின் நொடிகளை …

மாய மருத்துவம்

வசீகரமான ஒரு பரிசை, ஒரு ஆச்சரியத்தை முதன் முதலில் ஒருவருக்கு அளிக்கப் போகும் மனம் சிலிர்த்துக் கொண்ட மயிர்க்கொட்டியென சுணைத்தபடியும் உள்ளூர வியந்தபடியும் நடந்து கொள்ளக்கூடியது. நான் யாருக்கும் பரிசளிப்பதில்லை. அல்லது ஒரு பொருளை பரிசென்னும் மகத்துவத்துடன் காவிச்செல்வதில்லை. எனக்குப் பரிசளிக்கப்படுவதிலும் ஆர்வமற்றவன். அதில் ஏதோவொரு கொழுவி எனக்குள் இருக்கிறது. ஒரு விலக்கம். பரிசுடன் வருபவர் என்னை நெருங்கிவிடுவார் என்பது போல் ஒரு மயக்கு. இதயத்தை மட்டும் இதுவரை பரிசளித்திருக்கிறேன். …