திராவகத்தின் மொழி
ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் எழுந்து இன்னொரு புறவுலகை உருவாக்குகின்றன. அது பெண்கள் உரத்துப் பேசும் உலகம். இலக்கியத்திலும் பண்பாட்டிலும் அதற்கு முக்கியமான பங்களிப்புண்டு. எவ்வளவு ஆவேசமாகவும் அம்மொழி நிகழலாம். ஆழியாளின் கவிதைகளில் உள்ள முக்கியமான அம்சம் ஆவேசம். அவரது …
