ஒஷோ : ஓர் உரை

ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு நாம் சிந்தனையில் உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய கற்சுவர்களை உடைக்க வேண்டியிருக்கிறது. ஜெயமோகனின் இந்த உரை ஓஷோவை அணுகுதலின் இன்னொரு கதவைத் திறப்பது.

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …