அரசின் விருதுகள் – எதிர்வினை

நேற்று நான் எழுதிய அரசின் விருதுகள் குறிப்புத் தொடர்பில் காலையிலேயே ஓரிரு வசைகளுடன் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. முழுவியலம் அமங்கலமாக இருப்பது ஒருவகையில் நேற்றின் தொடர்ச்சி தான். ஆற்றப்படும் அனைத்து செயல்களுக்கும் வினைகளுக்கும் எப்படியோ எப்பொழுதோ எதிர்விசைகள், பழிநிகர்கள் நிகழ்வது இயற்கையே. ஆனால் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் நான் அந்தக் குறிப்பை சோ. பத்மநாதனை அவமதிப்பதற்காக எழுதியதாகக் கருதியே கடுமையாக ஏசியிருக்கிறார். அவருக்கு யாரோ வட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அரச இலக்கிய …

திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று முன்வைக்கும் பண்பாடென்பது அத்தகைய ஆளுமைகளுக்கு ஊடாக வெளிப்படும் ஒரு கனவையே. அவர்களின்றி ஆழ்மனம் வெளிப்பட முடியாது. வெளிப்பட்டு சமூகத்துடன் உரையாடி அதை மாற்ற முடியாது. …

அஞ்சலிக் கூட்டம்

மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது.

அஞ்சலி

ஈழத்தின் நாடக வரலாற்றின் முதுதந்தை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் காலமாகி விட்டார். அவர் எனதூரைச் சேர்ந்தவர். எனது வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் சென்று விடக் கூடிய தூரம். இளவயதில் அவர் ஒவ்வொரு காலையிலும் சைக்கிளில் தின்னவேலி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒழுங்கு குலையாத ஒன்று நம் பார்வையில் படுகையில் அது நம்முள் ஒரு படிமாகி விடுகிறது. அவருடன் ஒரு நீண்ட சந்திப்பும் ஒரு சிறு …