கள்ளி மலர்ச்செண்டு

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் சுழல் விளிம்பில் நீந்திக் கரையேறுபவை. பெண்ணுலகின் பருவங்கள், உளத் துவர்ப்புகள், வேட்கைகள், நிராசைகள், ஆற்றாத கேள்விகள் என்பன சல்மாவின் கவிதைகளை ஊடறுத்து ஒலிப்பவை. அவரது கவிதைகளில் முன்வைக்கப்பட்ட பெண் தன்னிலைகளின் உலகென்பது பெண்ணுடலின் வித்தியாசங்களை, …