எரியும் நெருப்பும் காற்றில்: 02
சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில் சேர்த்திருக்கிறேன். * “சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகள். சிவரமணி மூத்தவர். சிவரமணியின் தந்தையார் …
