இமிழ்: அழைப்பு

பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள். இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் இருந்து அச்சொல் இக்கதை மலருக்கு இடப்பட்டிருக்கிறது. கவிதையைத் தேடி வாசித்தேன். போரில் எதிரிகளைக் கொன்ற புலால் மணம் மாறாத தந்தங்களுடைய யானையைப் புலவனுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் ஒரு மன்னன். புலவன் அந்த யானையை அஞ்சி …

மென்னிழைகளால் நெய்யும் பூமி

எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது. அது தான் கலையின் வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது. கிளர்த்துவது. ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும் படித்திருக்கிறேன் . மிகப் பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன். ஆனால் முழுமை கூடிய இப்படி ஒரு தொகுப்பை படித்ததில்லை. ஒரு மகத்தான கலைஞனின் கைகளுக்குத் …