விடுதலையின் மாஇசை
தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது. சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் கரிசனம் கொள்பவை. தீண்டாமையின் பல்வேறு தருணங்களைத் தீண்டி மொழிக்குள் நிலைக்க வைப்பவை. பளீரென்ற வாள் வீச்சுப் போல் விழும் வரிகள் சமூக மனசாட்சியை அறுத்து அதன் கடலளவு இரத்தம் கால்களின் கீழ் திரள அதன் …
