தங்கமே குட்டியே

நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் தவறுதான்நீங்கள் என்னுடையவை அல்லநீங்களும் அல்ல ஒவ்வொரு நிரையாய் அடுக்கி வைக்கப்பட்டகார்ட்ஸ் கோபுரத்தின் இறுதி அட்டையைஎடுக்கத் திரும்பிய போதுஏதோவொன்றுஅதை வீழ்த்தியிருக்கிறது. அக்கணத்தின் விடுபடலுக்குவாழ்த்துக்கள்என் தங்கமே. அழகிய தெத்துப்பல்லெனபழைய கவிதைகளின் ஒரு பல்இந்தக் கவிதைக்குள்ளும் முளைத்திருக்கிறது. உனக்கும் …