மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை இசைத்தன்மையை உண்டாக்கின. அவருக்கு அறமோ காதலோ, சீற்றமே மொழி. அவரது சொல்முறையினால் ஈர்க்கப்பட்டு உருவாகிய இளம் தலைமுறையினரில் சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் முக்கியமானவர்கள். அவர்களின் சொற் தேர்வுகளிலும் இணைவுகளிலும் எஸ் போஸ் இன்னமும் புன்னகைத்தபடி …