உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பாடலாசிரியர் தாமரையின் பாடல்கள் தன் சொற்தேர்வுகளாலும் அன்றாடத்தின் அவதானிப்பு நுண்மைகளாலும் புகழ் பெற்றவை. இவரது பாடல் வரிகள் இசையில் குழந்தையின் விரல்களில் தாயின் கூந்தலிழைகளென பற்றிக்கொள்பவை. ஒரு நல்ல பாடலாசிரியர் தனது சொல்லுலகின் தனித்துவத்தால் தனக்கான பொருளுலகையும் உருவாக்கக் கூடியவர். தாய்மை அல்லது தந்தைமை பற்றிய தாமரையின் பாடல்வரிகள் நம் காலத்தின் மகத்தான தாலாட்டுப் பாடல்களாக தாய்க்கும் தந்தைக்கும் ஆகியிருக்கின்றன. குழந்தைமை தாலாட்டும் பெற்றோர்களென அவர்களை எண்ணத் தூண்டுவது. * …