தாயதி : ஒரு பேரன்னையின் பெருங்கனவு
தாயதி பதிப்பகம் என்பது கவிஞர் தில்லையது உள்ளாற்றலின் பேருருவம். எதற்கும் அஞ்சாத தன் நெஞ்சின் குரலை மட்டுமே கேட்டிருக்கும் பேரன்னை போன்றவர் தில்லை. அவருடன் சில முறை கதைத்திருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு தொகுப்பை நான் விரும்பும் வகையிலான தாளும் அட்டையும் போட்டுப் பதிப்பிக்கலாம் எனச் சொல்லியிருந்தார். எனது கவிதைத் தொகுப்பின் முப்பது பிரதிகளைச் சுவிசுக்குப் பத்தும் தில்லை அறிவாலயத்துக்கு இருபதுமாக வாங்கிக் கொண்டார். அது எனக்குப் பெரிய ஊக்கத்தை …
