மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு மலரினைச் சாத்துமென்! அஸ்வகோஷ் * உடல் கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல் இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது: …
