சூல் கொளல் : 01

பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென வளர்ந்தன. காலனித்துவ ஆட்சிக்கெதிரான போக்கிலே சிங்களத் தேசியவாதமும் தமிழ்த்தேசியவாதமும் வளர்ந்து வால் நீண்டிருந்தன. சிங்களமும் பவுத்தமும் அநகாரிக தர்மபாலாவினால் முன்வைக்கப்பட்ட சமநேரத்தில் சைவமும் தமிழும் …