மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டுசம்பந்தமில்லாதது போல்போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன் முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றிபளிச்சிடும் வரியைஇனியும் எழுதாமலிருக்க முடியாதுசும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… …
