வெற்றிடத்தால் எழும் வீடு

ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை இவை இந்த நிலத்தின் சித்துச் சொற்கள். அவற்றின் கவித்துவமான அடைவு வாழ்வை வேறொன்றின் தொடர்ச்சியெனத் தன்னை உருவகித்துக் கொள்வது. எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் …